துருக்கி விமான நிலைய தாக்குதல்: பலி எண்ணிக்கை 42 ஆக அதிகரிப்பு; 238 பேர் காயம்
இஸ்தான்புல்: துருக்கி இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
துருக்கியிலுள்ள இஸ்தான்புல் அடாடர்க் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய மூன்று தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டன. உலகையே பதற வைத்துள்ள இந்த கொடூர தாக்குதல்களில் 36 பேர் பலியானதாகவும், 150-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தவர்களில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. 239 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் 109 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாவும் நகர கவர்னர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் 13 பேர் வெளிநாட்டவர்கள். சவூதி அரேபியாவைச் சேர்ந்த 5 பேரும், ஈராக்கைச் சேர்ந்த 2 பேரும், துனிசியா, உஸ்பெகிஸ்தான், சீனா, ஈரான், உக்ரைன் மற்றும் ஜோர்டானைச் சேர்ந்த தலா ஒருவரும் பலியானதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த தாக்குதலில் இந்தியர்களுக்கு பாதிப்பில்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தற்கொலைத் தாக்குதலை ஐஎஸ் தீவிரவாதிகள் நிகழ்த்தியிருக்கலாம் என அந்நாட்டு பிரதமர் பினலி இல்டிரிம் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
-
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்.. தமிழ்நாடு 30 வருடம் பின்னோக்கி செல்லும்.. பரந்தூரை மூடிய விஜய்! -
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
பரந்தூர் விமான நிலைய பணி நிறுத்தம்.. சிப்காட் பூங்கா அமைக்க முடிவு? விஜய்யின் மெகா திட்டம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications