கொரோனா வைரஸ்: இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் பலி.. சீனாவைவிட வேகமாக பரவும் சோகம்
ரோம்: இத்தாலியில் கொரோனா வைரஸால் நேற்று ஒரே நாளில் மட்டும் பலியானோரின் எண்ணிக்கை 1000த்தை நெருங்கியது.
Recommended Video
கொரோனாவை ஒழிக்க உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் பரவிய கொரோனா பின்னர் இத்தாலி, ஸ்பெயின், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கடுமையாக பரவியது.

அமெரிக்காவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இத்தாலியில் சீனாவை காட்டிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.
இதனால் நேற்று மட்டும் 969 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பலியானோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியது. அது போல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86,498 ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலியில் நேற்று மட்டும் 10,950 பேர் முழுவதுமாக குணமடைந்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் 3,732 பேர் உள்ளனர். இத்தாலியில் லம்பார்டியின் வட பகுதியில் அதிகமாக கொரோனா பரவி வருகிறது. ஸ்பெயின் நாட்டில் நேற்று ஒரே நாளில் 769 பேர் பலியாகிவிட்டனர். மொத்த எண்ணிக்கை 4,858 ஆக ஆகியுள்ளது.












Click it and Unblock the Notifications