ஜப்பான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு.. மீண்டும் ஏற்பட வாய்ப்பு.. தூக்கத்தை தொலைத்த மக்கள்
டோக்கியோ: ஜப்பானில் கடந்த 1 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோரின் எணணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.
ஜப்பானில் ஹொன்ஷு தீவுகள் பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேற்று முன் தினம் (ஜனவரி 1) ஏற்பட்டது. அதாவது இந்திய நேரப்படி பிற்பகல் 12.40 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.5 ஆக பதிவாகியிருந்தது.

90 நிமிடங்களில் அடுத்துத்து 21 முறை நிலநடுக்கம், நில அதிர்வுகள் ஏற்பட்டன. அண்மைக்காலங்களில் இது போன்ற ஒரு நிலநடுக்கத்தை ஜப்பான் பார்த்ததில்லை. ஜப்பானின் மேற்கு கரையையொட்டியுள்ள பகுதிகளில் அதிக தாக்கம் உணரப்பட்டது. ஹொகைடோ தீவுகள் முதல் நாகசாகி வரை நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.
இதனால் அந்த பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. 1 முதல் 3 மீட்டர் உயரம் வரை, சில இடங்களில் 5 மீட்டர் உயரத்திற்கு கூட அலைகள் எழும் என எச்சரிக்கப்பட்டது. இதனால் மக்கள் உயரமான கட்டடங்களில் தஞ்சமடையுமாறு அறிவுறுத்தப்பட்டது. நிலநடுக்கத்தால் சாலைகளில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 62 பேர் பலியாகிவிட்டனர்.
சுனாமி எச்சரிக்கை விடுத்த நிலையில் நிறைய இடங்களில் கடல் ஆக்ரோஷமாக இருந்தது. கடலோரம் வசிக்கும் இடங்களில் தண்ணீர் புகுந்தது. ஹோன்ஷு தீவுகளில் கடல் அலை 1 மீட்டரை தாண்டி உயர்ந்தது. நேற்றைய தினம் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. நிலநடுக்கத்தால் நோட்டோ மாகாணத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
100க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகளில் மீட்பு பணியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் அங்கு நிலவி வரும் வானிலை காரணமாக இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 31, 800 க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.
நிலநடுக்கத்திற்கிடையே நோட்டோ மாகாணத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. கடலோர நகரமான சூஸுவில் அதன் மேயர் மசுஹிரோ இசுமியா கூறுகையில் அங்கு ஒரு வீடுகள் கூட இல்லை. எல்லாமே தரைமட்டமாகிவிட்டன என்றார்.
பல இடங்களில் மின்சாரம் இல்லை. தண்ணீர் இல்லை. கடந்த 24 மணி நேரமாக 1000 பேர் காத்திருக்கும் சூழலில் புல்லட் ரயில்களின் இயக்கம் தொடங்கியது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானின் வடகிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 18,500 இறந்தும் மாயமாகியும் இருந்தனர். இதன் ரிக்டர் அளவு 9.0 ஆகும். ஃபுகுஷிமாவில் இருந்த அணுஆயுத உலையை அப்படியே அழித்துவிட்டது. இதுதான் உலகின் மோசமான பேரிடர் என சொல்லப்பட்டது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications