ஜப்பான்காரன் எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்குறான் நாம?... இந்திய ரயில்வேயை சீண்டிய நெட்டிசன்ஸ்
ரயில் புறப்படும் நேரத்தை விட 20 நொடி முன்பாகவே புறப்பட்ட காரணத்தால் ஜப்பான் ரயில் நிறுவனம் தன் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறது.
டோக்கியோ: ரயில் புறப்படும் நேரத்தை விட 20 நொடி முன்பாகவே புறப்பட்ட காரணத்தால் ஜப்பான் ரயில் நிறுவனம் தன் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறது. இதற்கான மன்னிப்பு கடிதத்தை அந்நிறுவனம் நேற்று வெளியிட்டது.
ஜப்பானின் இரண்டு முக்கிய பகுதிகளை இணைக்கும் அந்த புல்லட் ரயில் பயணிகளிடம் அறிவிக்கப்படாமல் 20 நொடி முன்னதாக புறப்பட்டது. இதனால யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும் ஜப்பான் ரயில்வே துறை மன்னிப்பு கேட்டு இருக்கிறது.
ஆனால் இந்தியாவை சேர்ந்த நெட்டிசன்கள் இதை பயன்படுத்த்தி இந்திய ரயில்வே துறையை கலாய்த்து வருகின்றனர்.

சீக்கிரம் புறப்பட்ட புல்லட் ரயில்
ஜப்பானில் பயன்பாட்டில் இருக்கும் புல்லட் ரயில்கள் அனைத்தும் சரியான நேரத்திற்கு இயக்கப்படும். ஒரு நொடி வித்தியாசம் இல்லாமல் புல்லட் ரயில் புறப்படுவதும், சென்றடைவதும் நடக்கும். ஆனால் நேற்று 'மினாமி' நகரத்தில் இருந்து டோக்கியோ செல்ல இருந்த புல்லட் ரயில் 20 நொடி முன்னதாகவே புறப்பட்டது. 9:44:40க்கு புறப்பட வேண்டிய ரயில் 9:44:20க்கு புறப்பட்டு இருக்கிறது. இதனால் எந்த பயணியும் பாதிக்கப்படவில்லை.

எதற்காக மன்னிப்பு
இந்த சம்பவத்தை அடுத்து ஜப்பான் ரயில்வே துறை மன்னிப்பு கேட்டு இருக்கிறது. தற்போது அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளது. அதன்படி ''பொதுவாக சரியான நேரத்தில் ரயில் புறப்படும். 20 நொடி சீக்கிரம் புறப்பட்ட காரணத்தால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. யாராவது ரயிலில் ஓடிச்சென்று ஏற வாய்ப்பு இருக்கிறது. இது போன்ற தவறு இனி நடக்காது'' என்று மிகவும் பணிவாக தனது விளக்கத்தை அளித்து உள்ளது.
|
ஜப்பான் நல்ல ஜப்பான்
தற்போது ஜப்பானின் ரயில்வே நிர்வாகத்தை பாராட்டி பலரும் டிவிட்டரில் எழுதி வருகின்றனர். ரயில்வே துறைனா ஜப்பான் மாதிரி இருக்கணும் என்றும் கூறி வருகின்றனர். இவர் தனது டிவிட்டில் ''பேசாம ஜப்பான் ரயில்வே நிர்வாகம் உலகம் முழுக்க இருக்குற எல்லா ரயில்வேதுறையையும் பராமரிக்கலாம்'' என்று கூறியிருக்கிறார்.
|
இந்திய ரயில்வே துறை
அதேபோல் இந்தியாவை சேர்ந்த நெட்டிசன்ஸ் பலர் இந்திய ரயில்வே துறையை இந்த செய்தியை வைத்து கலாய்த்து வருகின்றனர். சிலர் இந்திய புல்லட் ரயிலும் இப்படி இருக்குமா என்று கேட்டுள்ளனர். இவர் ''கடைசியா இந்திய ரயில்வே துறை சரியான நேரத்துல ரயிலை எடுக்காததுக்கு எப்ப மன்னிப்பு கேட்டது'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications