என்ன "ஐஸ்" வச்சாலும் இந்த ஐஸ்கிரீம் உருகவே உருகாது பாஸ்.. எப்பூடி!
ஜப்பான் நாட்டில் உருகாத ஐஸ்கிரீமை கண்டுபிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர் அந்த நாட்டு விஞ்ஞானிகள்.
டோக்கியோ: ஜப்பானின் கனசாவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கடுமையான வெப்பத்தில் கூட உருகாத, தன்னுடைய நிலை மாறாத ஐஸ்கிரீமை கண்டுபிடித்துள்ளனர்.
மகுடிக்கு மயங்காத பாம்பும் இல்லை, ஐஸ்கிரீம்க்கு மயங்காத மனிதர்களும் இல்லை. அந்த அளவிற்கு ஐஸ்கிரீம் என்றால் அனைவருக்குமே அலாதி பிரியம் தான். கப் ஐஸ், கோன் ஐஸ், கேக் ஐஸ் என்று பல வடிவங்களில் பல சுவைகளில் கிடைக்கும் ஐஸ்கிரீம்களை வாங்கிய உடன் சுவைக்காவிடில் உருகி ஊற்றி சுவையும், வடிவமும் பாழாகிவிடும்.
ஆனால் ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குளிரூட்டியில் இருந்து எடுத்தாலும் சுவைத்து முடிக்கும் வரை உருகாத, வடிவம் மாறாத ஐஸ்கிரீமை கண்டுபிடித்துள்ளனர். ஸ்கூப்புகளில் இருந்து எடுக்கப்படும் ஐஸ்கிரீம்கள் பவுலில் போட்டவுடன் உருகிவிடும் என்று வேகவேகமாக ருசிப்பதற்கு இனி குட்பை சொல்லி விடலாம் என்பதே இதன் சிறப்பு
|
கவனத்தை ஈர்த்த ஐஸ்கிரீம்
ஐஸ்கிரீம்களை குளிரூட்டும் நிலையை அதிகரித்து உருகும் நிலையை குறைக்கும் முயற்சியில் ஜப்பானின் கனசவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெற்றி கண்டுள்ளனர். இந்த ஐஸ்கிரீம் உலக அளவில் கவனத்தை ஈர்த்து உள்ளது.
3 மணி நேரம் உருகாத ஐஸ்கிரீம்
இந்த புதிய கண்டுபிடிப்பு ஐஸ்கிரீம் ரூம் டெம்பரேச்சரில் 3 மணி நேரம் வரை உருகாமல் இருக்கும் என்று பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. ஆராய்ச்சியாளர்கள் ஹேர்ட்ரையரில் வரும் வெப்பத்தை கொண்டு ஐஸ்கிரீம் மீது 5 நிமிடங்கள் காட்டிய போதும், அவை தன்னுடைய வடிவம் மாறாமல் உருகாமல் அப்படியே இருந்துள்ளது
|
ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்
ஸ்ட்ராபெர்ரியில் இருந்து எடுக்கப்படும் பாலிபெனால் என்ற திரவத்தை ஐஸ்கிரீமில் புகுத்தி இந்த ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. பாலிபெனாலுக்கு நீரை அடர்த்தியாக்கும் தன்மையும் எண்ணெயை பிரித்தடுக்கும் தன்மையும் உள்ளதாக கனசவா பல்ககைக்கழக பேராசிரியர் தோமிஹிசா ஓட்டா கூறியுள்ளார்.

சாப்பிட விரும்பும் மக்கள்
பாலிபெனால் புகுத்தப்பட்ட ஐஸ்கிரீம்கள் நீண்ட நேரத்திற்கு உருகாமல் தன்னுடைய வடிவத்திலேயே இருக்கும். இந்த வகை ஐஸ்கிரீம்கள் சாக்லேட், வெணிலா மற்றும் ஸ்டாபெர்ரி உள்ளிட்ட சுவைகளில் கிடைக்கும் என்பதால் உலகம் முழுவதிலுமிருந்து வரும் மக்கள் இதை சாப்பிட முயற்சித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டுக்கு எப்பப்பா வரும் இந்த ஐஸ்கிரீம்.. ??
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications