ஜப்பானில் உருவாகும் 'பேய்' நகரங்கள்! 90 லட்சம் வீடுகளில் ஆளே இல்லையாம்! காரணம் இதுதான்
டோக்கியோ: ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்து வருவதால், வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் பல நகரங்களில் கைவிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இன்றைய தேதியில் கைவிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 90 லட்சமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இவை பேய் வீடுகள் என அழைக்கப்படுகின்றன.
கைவிடப்பட்ட வீடுகள் அதிகரிப்பு
ஜப்பான் உள்துறை மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் 2023ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, தற்போது 8.9 மில்லியன் வீடுகள் காலியாக உள்ளன. இது மொத்த வீடுகளில் 10.3% ஆகும். பல ஆண்டுகளாக வாடகைக்கு விடப்படாமல் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட வீடுகளும் இதில் அடங்கும்.

நோமுரா ஆராய்ச்சி நிறுவனத்தின் (NRI) ஆய்வின்படி, அடுத்தடுத்த ஆண்டுகளில் ஜப்பானில் 30.4% வீடுகள் காலியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு வீட்டிற்கும் அருகில் ஒரு ஆளில்லாத வீடு இருக்கும் சூழ்நிலை உருவாகும்.
பிரச்சினைக்கான காரணங்கள்
இந்த பிரச்சனைக்கு பல காரணங்கள் உள்ளன. அதிக சொத்து வரி, ஆளில்லாத வீடுகளை இடிப்பதற்கான செலவு, விற்பனை வாய்ப்பு இல்லாத நிலத்தின் மீதான வரிச்சுமை ஆகியவை முக்கிய காரணங்களாகும். மேலும், ஏப்ரல் 2024 வரை இருந்த சிக்கலான நில நிர்வாக விதிமுறைகள், வாரிசுதாரர் தனது சொத்தை கைவிட்டுவிட்டு தலைமறைவாக அனுமதித்தன.
டோக்கியோவின் சில பகுதிகளில், அதிகாரிகள் குழுவினர் சைக்கிள்களில் சென்று, புதர் மண்டி இருக்கும் தோட்டங்கள், உடைந்த ஜன்னல்கள் போன்றவற்றை கவனித்து வருகின்றனர். அதிகாரிகள் கூறுகையில், "கைவிடப்பட்ட கட்டிடத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளரிடமிருந்து புகார் வந்தால், அதன் உரிமையாளர் அல்லது வாரிசை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறோம்" என்றார்.
நிலத்தை காலி இடமாக வைத்திருந்தால் வரி அதிகரிக்கும். இதனால், கட்டிடத்தை இடிக்க உரிமையாளர்கள் தயங்குகிறார்கள். அக்கம்பக்கத்தினருக்கு அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே உள்ளாட்சி அரசாங்கங்கள் தலையிட முடியும்.

கைவிடப்பட்ட வீடுகளால் பிரச்சனை
கைவிடப்பட்ட வீடுகளில் தீ விபத்துக்கள் ஏற்படுகின்றன. குப்பைகள் நிறைந்த கட்டிடங்கள், காட்டு விலங்குகள் நடமாட்டம் போன்ற பிரச்சனைகளும் உள்ளன. அதே நேரத்தில், கைவிடப்பட்ட சொத்துக்கள் புதிய வீடுகளாகவும், அலுவலகங்களாகவும், விருந்தினர் இல்லங்களாகவும் மாற்றப்பட்டும் வருகின்றன . தொலைதூரத்தில் வேலை செய்வது மற்றும் இளைஞர்களிடையே வேலையின்மை அதிகரிப்பு போன்ற காரணங்களால் பழைய வீடுகளைப் புதுப்பித்து பகிர்ந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. இது ஒரு தீர்வாக இருந்தாலும், இது முழுமையான தீர்வல்ல என்று NRI நிபுணர் வதரு சககிபரா கூறுகிறார்.
மாற்றி அமைக்கும் கலாச்சாரம்
சககிபாரா கூறுகையில், ஜப்பானின் "தூக்கி எறிந்துவிட்டு புதிதாக்கும்" கலாச்சாரமே காலி வீடுகள் பிரச்சினைக்கு காரணம். எரிமலைகள் நிறைந்த நாடு என்பதால் இயற்கை பேரழிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், மர வீடுகளை 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றும் பழக்கம் உருவானது.
"காலியான வீடுகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென்றால், பிறப்பு விகித சரிவை தடுக்க வேண்டும். பொருளாதார வீழ்ச்சி இருந்தபோதிலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தொடங்கப்பட்ட கட்டுமான ஊக்குவிப்பு விதிமுறைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. ஜப்பானிய வீடுகளின் குறுகிய ஆயுட்காலம் பல மில்லியன் டாலர் ரியல் எஸ்டேட் சந்தையை உருவாக்கியுள்ளது. இதை மாற்றுவது கடினம்" என்றார்.
2022ஆம் ஆண்டில் ஜப்பானில் 770,000 பிறப்புகளே பதிவாகியுள்ளன. இது ஒரு வரலாற்றுச் சரிவு. திருமணங்களின் எண்ணிக்கை குறைந்தது, கர்ப்பங்களின் எண்ணிக்கை குறைந்தது மற்றும் கோவிட் சமயத்தின் போது வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது போன்ற காரணங்களால் பிறப்பு விகிதம் குறைந்தது.
கேயோ பல்கலைக்கழகத்தின் மதிப்பீட்டின்படி, ஜப்பானின் மக்கள்தொகை தற்போதுள்ள 125 மில்லியனிலிருந்து 2065ஆம் ஆண்டில் 88 மில்லியனாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 30% குறைவு ஆகும். இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு மானியம் வழங்குவது மற்றும் இணையத்தில் வாழ்க்கை துணையை தேடும் செயலிகளை ஊக்குவிப்பது போன்ற தோல்வியடைந்த கொள்கைகளை நாடு பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது.
பாரம்பரிய பாலின சமத்துவமின்மை காரணமாக திருமணங்களை தவிர்க்கும் மனநிலை போன்ற காரணங்களால் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
ஜப்பானில் அதிகரித்து வரும் வயதானவர்களின் எண்ணிக்கை மற்றும் அதனால் ஏற்படும் சவால்களை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், பிறப்பு விகிதத்தை உயர்த்துவது மற்றும் காலி வீடுகளின் எண்ணிக்கையை குறைப்பது ஆகியவை நீண்டகால தீர்வுகளாக அமையும்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications