For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலில் 10 பொருட்களை பார்த்தோம், விமானத்தின் பாகங்களாக இருக்கும்: ஜப்பான்

By Siva
Google Oneindia Tamil News

டோக்கியோ: தெற்கு இந்திய பெருங்கடலில் 10 பொருட்கள் மிதந்ததை ஜப்பான் நாட்டு செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்துள்ளது.

கடந்த 8ம் தேதி 239 பேருடன் மாயமான மலேசிய விமானம் எம்.ஹெச். 370 தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தை தேடும் பணியில் விமானங்களும், கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

ஜப்பான்

ஜப்பான்

ஜப்பான் நாட்டு செயற்கைக்கோள் பெர்த் நகரில் இருந்து 2 ஆயிரத்து 500 கிமீ தொலைவில் உள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் 10 பொருட்கள் மிதப்பதை புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்துள்ளது.

பொருட்கள்

பொருட்கள்

நேற்று முன்தினம் காலை 9 மணி முதல் மதியம் 3 மணிக்குள்ளான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்பட்டத்தில் உள்ள பொருட்கள் 8 மீட்டர் நீளமும், நான்கு மீட்டர் அகலமும் கொண்டவையாக உள்ளன.

பாகங்கள்

பாகங்கள்

ஜப்பான் செயற்கைக்கோள் புகைப்படத்தில் உள்ள பொருட்கள் தெற்கு இந்திய கடற்பகுதியில் விழுந்த மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கக்கூடும் என்று ஜப்பான் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மலேசியா

மலேசியா

ஜப்பான் இந்த புதிய தகவலை மலேசிய அரசிடம் தெரிவித்துள்ளது. முன்னதாக தாய்லாந்து செயற்கைக்கோள் இந்திய பெருங்கடலில் 300 பொருட்கள் மிதப்பதை புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Japab satellite has spotted 10 objects in th Indian ocean which could possible be the debris of the ill fated Malaysian airlines.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X