துபாயில் பெரிய்ய்ய கேக் வெட்டி ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்: நாஞ்சில் சம்பத் பங்கேற்பு
துபாய்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கடந்த மாதம் 7ம் தேதி துபாயில் உள்ள ஜெ.ஜெ. பள்ளி அரங்கில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சல் சம்பத் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஜெயலலிதா தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பணிகளை பட்டியலிட்டு சிறப்பித்துப் பேசினார்.
துபாயில் ஜெயலலிதாவின் 66வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டதை மிகவும் பெருமையாக கருதுவதாக அவர் தெரிவித்தார்.

இவ்விழாவில் துபாய் முத்தமிழ்ச் சங்கம் மோகன், பஹ்ரைன் தமிழ்ச் சங்கம் சாமி, லண்டன் ஜான், ராமச்சந்திரன், துபாய் முத்தமிழ்ச் சங்கம் ஷா, அனீஸ், சிகாமணி, கணேஷ், பாலா, பாலு, திருமதி. விஜி பாலு, சாகுல் ஹமீத், பாலுசாமி, ராஜேந்திரன், புருஷோத்தமன் மற்றும் 400 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இவ்விழாவில் கிறிஸ்டல் குழுவினரின் நடன நிகழ்ச்சி விழாவிற்கு வந்த மக்களின் கண்களை கவரும் வண்ணமாக அமைந்திருந்தது.

இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை திரு. சக்திவேல், கார்த்திகேயன், சரவணன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். விழாவை சிறப்பாக தொகுத்து வழங்கினார் செல்வி. நிவேதிதா.












Click it and Unblock the Notifications