அமெரிக்க நிதி நெருக்கடிக்கு ஒபாமா விரைவில் தீர்வு காண்பார்: ஜான் கெர்ரி நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

பந்தார் செரி பெகவான்: அமெரிக்க நிதி நெருக்கடி விரைவில் சரியாகும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 நாட்களாக அமெரிக்காவில் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு ஷட் டவுண் அமலில் உள்ளது. நிதி மசோதா பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்படாததே அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட முக்கியக் காரணம். அதிபர் ஒபாமாவின் வெள்ளை மாளிகையில் கூட குறைந்த அளவிலேயே ஊழியர்கள் வேலைக்கு வருகிறார்கள். அமெரிக்க ஷட் டவுணின் விளைவாக பல வெளிநாட்டு நிறுவனங்களும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

Obama and John Kerry

இதனைத் தொடர்ந்து, நேற்று புரூனே நாட்டில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்ட சீன பிரதமர் லீ கேகுயாங், இது குறித்த தனது கவலையை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியிடம் பகிர்ந்து கொண்டார்.

சீன பிரதமருக்கு பதிலளிக்கும் வகையில் ஜான் கெர்ரி தெரிவித்ததாவது, ‘இதற்கு உள்ளூர் அரசியல் விவகாரமே காரணம். இப்பிரச்சினையில் ஜனாதிபதி ஒபாமா விரைவில் தீர்வு காண்பார்' எனக் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+