Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன நடக்கும் என நான் சொல்ல மாட்டேன்.. ஆனால்.. போருக்கு நடுவே இஸ்ரேல் பிரதமர் சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. மூர்க்கத்தனமாக இஸ்ரேல் படைகள் தாக்கி வரும் நிலையில், எதிரிகள் தற்போதுதான் தங்கள் செயலுக்கான விலையை கொடுக்க தொடங்கியிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர்8-வது நாளாக நீடித்து வருகிறது. காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7 ஆம் தேதி திடீர் தாக்குதலை நடத்தினர். எதிர்பாராத இந்த தாக்குதலால் ஒரு நொடி அதிர்ந்து போன இஸ்ரேல், பின்னர் பதில் நடவடிக்கையாக காசா நகரம் மீது குண்டு மழை பொழிந்தது. இஸ்ரேலின் பதில் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தின் காசா, மேற்கு கரை பகுதிகளை நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

just the beginning israeli PM Benjamin Netanyahu said in a television address

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரால் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஒழிக்கப்படும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். இதன்படி, காசா மீது இஸ்ரேல் ராணுவம் சரமாரி வான்தாக்குதலை தொடுத்து வருகிறது.

தற்போது காசாவை முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல் படை தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளது. இதற்காக காசா வின் வடக்கு பகுதியில் வசிக்கும் 10 லட்சம் மக்களை தெற்கு பகுதிக்கு செல்லும்படி இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக 24 மணி நேர கெடுவையும் விதித்துள்ளது. ஆனால், இஸ்ரேலின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐநா, இஸ்ரேல் தனது அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையை அடுத்து காசா மக்கள் பலரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி வெளியேறி வருகின்றனர். பலர் அண்டை நாடான எகிப்தை நோக்கி அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். காசா நகரம் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படை இடையேயான போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது தொடர்பாக கூறும் போது, தற்போதுதான் தாக்குதல் தொடங்கியிருப்பதாகவும் எதிரிகள் விலையை கொடுக்க தொடங்கியிருப்பவதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக பெஞ்சமின் நெதன் யாகு கூறுகையில், " நமது எதிரிகள் தற்போது விலையை கொடுக்க தொடங்கியிருக்கிறார். என்ன நடக்கும் என்பதை நான் சொல்ல மாட்டேன். ஆனால், ஒன்றைமட்டும் சொல்கிறேன். இது வெறும் தொடக்கம் தான்" என்றார்.

தொடர்ந்து நெதன்யாகு கூறுகையில், "நாம் ஒருபோதும் மன்னிக்க மாட்டோம். யூதர்களுக்கு இழைக்கப்பட்ட இந்த கொடூரங்களை உலகம் மறக்க ஒருபோதும் விட மாட்டோம். வரைமுறைகள் இன்றி அதிகாரத்தை பயன்படுத்தி எதிரிகளுடன் சண்டையிடுவோம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+