மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது... ட்விட்டரில் கமல்ஹாசன் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

துபாய்: பிரபல நடிகை ஸ்ரீதேவி மரணத்திற்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் ஸ்ரீதேவி. தமிழில் ரஜினி, கமல் உள்ளிட்ட முண்ணனி நடிகர்களின் திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர். துபாயில் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார்.

 Kamal pays homage to sridevi via twitter

54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவருக்கு போனி கபூர் என்ற கணவரும், ஜானவி மற்றும் குஷி என இரண்டு மகள்களும் உள்ளனர்.

ஸ்ரீதேவியின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, நடிகர் ரஜினி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசனும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த மறைவு செய்தி தன்னை துன்பத்தில் ஆழ்த்துவதாகவும், பழைய நினைவுகள் நினைவுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவியின் இந்த மறைவு திரை உலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+