விலைவாசி உயர்வு.. வெடித்த மக்கள் புரட்சி.. கஜகஸ்தான் அரசு கவிழ்ந்தது!
அல்மாட்டி: எரிவாயு விலை உயர்வை கண்டித்து கஜகஸ்தானில் மக்கள் புரட்சி வெடித்தது. கட்டுக்கடங்காத இந்த போராட்டத்தின் விளைவாக அந்நாட்டு அரசு கவிழ்ந்தது. இதையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
எண்ணெய் வளங்களை கொண்ட மத்திய ஆசிய நாடுகளுள் ஒன்று கஜகஸ்தான். இங்கு புத்தாண்டையொட்டி திரவ பெட்ரோலிய எரிவாயுக்கான விலை அதிகரித்தது. இதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எண்ணெய் மற்று்ம எரிவாயு ஏற்றுமதியாளரான கஜகஸ்தானில் விலை உயர்வு நியாயமே இல்லை எனக் கூறி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து தலைநகர் அல்மாட்டி, மேற்கு மாகாணமான மங்கிஸ்டாவில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராடினர்.
இதையடுத்து அல்மாட்டி மாநகராட்சி அலுவலகத்தை போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இதையடுத்து போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தியும் கேட்கவில்லை. அரசு கட்டடங்கள், வாகனங்களை தீவைத்து கொளுத்தினர். பேருந்து போக்குவரத்தை தடை செய்தனர். இதையடுத்து போலீஸார் அந்த பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தை கலைக்க முற்பட்டனர்.
எரிவாயு உருளை எல்பிஜியின் விலை குறைவு என்பதால் மக்கள் இரு சக்கர வாகனங்களிலிருந்து கார்களுக்கு மாறினர். தற்போது கார்களுக்கு பயன்படுத்தப்படும் எல்பிஜியின் விலையும் அதிகரித்துவிட்டதால் மக்கள் புரட்சி வெடித்தது.
போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். இதையடுத்து அந்நாட்டு அரசு ராஜினாமா செய்தது. இந்த ராஜினாமாவை அந்நாட்டு அதிபர் காசிம் ஜோமார்ட் டோக்காயேவ் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து அந்த நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் எரிவாயு விலையை கட்டுப்படுத்துமாறு மாகாண ஆளுநர்களுக்கு அதிபர் உத்தரவிட்டார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications