கென்யாவில் ஷாப்பிங் மாலில் 3வது நாளாக தொடரும் துப்பாக்கிச்சூடு: 68 பேர் பலி
நைரோபி: கென்யாவில் உள்ள ஷாப்பிங் மாலில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 68 பேர் பலியாகினர்.
கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ட்கேட் ஷாப்பிங் மாலுக்குள் கடந்த சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு புகுந்த அல் ஷபாப் தீவிரவாதிகள் அங்கிருந்த முஸ்லீம்களை வெளியேறும்படி கூறிவிட்டது முஸ்லீம் அல்லாதவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 இந்தியர்கள், 2 பிரான்ஸ் நாட்டவர்கள், 2 கனடா நாட்டவர்கள், இங்கிலாந்தைச் சேர்ந்த 3 பேர், 1 சீனர் மற்றும் கானாவைச் சேர்ந்த ஒருவர் உள்பட 68 பேர் பலியாகினர்.

இறந்தவர்களில் பார்மா கம்பெனியில் பணிபுரிந்த இந்தியரான ஸ்ரீதர் நடராஜன்(40) மற்றும் நைரோபியில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா கிளை மேனேஜரின் மகன் பரம்ஷு ஜெயின்(8) ஆகியோரும் அடக்கம். மேலும் 2 பெண்கள், ஒரு சிறுமி உள்பட 4 இந்தியர்கள் காயம் அடைந்தனர்.
தீவிரவாதிகள் சிலரை பிணையக் கைதிகளாக மாலுக்குள் பிடித்து வைத்துள்ளனர். முகமூடி அணிந்த தீவிரவாதிகள் தொடர்ந்து மாலுக்குள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று புதிதாக துப்பாக்கிச்சூடு நடத்திய சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து 3வது நாளாக மாலுக்குள் தீவிரவாதிகள் இருந்து வருகின்றனர்.
இந்த தாக்குதலில் 175 பேர் காயம் அடைந்துள்ளனர். பிணையக் கைதிகள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாக கென்ய அரசு தெரிவித்துள்ளது. மேலும் கென்ய பாதுகாப்பு படையினர் அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்துள்ளனர். இது தவிர நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சோமாலியாவில் ஆப்பிரிக்க படைகள் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக போராடி வருகிறது. இதற்கு பழிவாங்கும் வகையில் தான் ஷாப்பிங் மாலை தாக்கியதாக அல் கொய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாத அமைப்பான அல் ஷபாப் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடந்த மாலுக்கு பணக்கார கென்ய மக்களும், வெளிநாட்டவர்களும் அதிக அளவில் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications