லிபியாவில் கடத்தப்பட்ட கேரள ஐடி பொறியாளர் விடுதலை
திரிபோலி: லிபியாவில் கடந்த மார்ச் மாதம் கடத்தப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஐடி பொறியாளர் ரெஜி ஜோசப் தற்போது விடுதலை செய்யப்பட்டு, பாதுகாப்பாக இருப்பதாக அங்குள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூரசுண்டு பகுதியை சேர்ந்தவர் ரெஜி ஜோசப். இவர் லிபியாவின் திரிபோலி யில் உள்ள அல் திவான் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். லிபியா நாட்டில் வாழும் மக்கள் தொகை புள்ளி விபரங்களை தொகுப்பது தொடர்பாக கணினியில் தகவல் கட்டமைப்பு (டேட்டாபேஸ்) வசதியை உருவாக்கும் கட்டமைப்பு பணியில் அவர் ஈடுபட்டு வந்தார்

இவரது மனைவி ஷின்ஜு தங்கச்சனும் லிபியாவில் உள்ள மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் திடீரென மாயமானார் ரெஜி. வீட்டில் இருந்த ரெஜியை அவர் பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளர் ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களை அனுப்பி வலுக்கட்டாயமாக தனது இடத்துக்கு அழைத்து சென்றதாகக் கூறப்பட்டது.
அங்கு சென்றதும் பணியிடத்துக்கு பாதுகாப்பாக சென்றுவிட்ட தாக மனைவிக்கும், கேரளாவில் உள்ள தனது சகோதரர் ஜோ ஜோவுக்கும், ரெஜி போனில் தகவல் அனுப்பியுள்ளார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. ரெஜி பணியாற்றும் நிறுவன உரிமையாளர் அவர் பத்திரமாக இருப்பதாக தெரிவித்துவிட்டு, வேறு தகவல்களை கூற மறுத்துள்ளார்.
இதனால் ரெஜியை தீவிரவாதிகள் கடத்திச் சென்றிருக்கலாம் என அவரது மனைவியும் குடும்பத்தினரும் சந்தேகித்தனர். இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்திடமும், கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடமும் அவர்கள் முறையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து ரெஜியை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் இந்திய தூதரக அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது ரெஜி விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும், திரிபோலியில் அவரது குடும்பத்துடன் பாதுகாப்பாக இருப்பதாகவும் லிபியாவில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. மேலும், விரைவில் அவர் பத்திரமாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications