சிறிய துளையால் கவிழ்ந்த படகு.. தான்சானியாவில் கொடூர விபத்து.. 218 பேர் பலி!

தான்சானியாவின் ஏற்பட்ட படகு விபத்து காரணமாக இதுவரை 218 பேர் பலியாகி உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டோடோமா: தான்சானியாவின் ஏற்பட்ட படகு விபத்து காரணமாக இதுவரை 218 பேர் பலியாகி உள்ளனர்.

கிழக்கு ஆப்ரிக்காவில் இருக்கும் சிறிய நாடுதான் தான்சானியா. இந்த தான்சானியாவையும், உகாண்டாவையும் பிரிக்கும் வகையில் ஓடும் பெரிய ஏரிகளில் லேக் விக்டோரியா எரியும் ஒன்று.

இந்த நிலையில் இதுவரை அங்கு ஏற்படாத பெரிய விபத்து ஒன்று இந்த லேக் விக்டோரியாவில் ஏற்பட்டு இருக்கிறது. மக்களை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து அங்கு விபத்து ஏற்பட்டுள்ளது.

எங்கு சென்றது

எங்கு சென்றது

தான்சானியாவின் உகாரா பகுதியில் இருந்து புகலோராவை நோக்கி இந்த படகு சென்று உள்ளது. சுமார் 400 பயணிகள் இந்த படகில் சென்று இருக்கிறார்கள். இந்த நிலையில் ஏரியின் நடுவில் வரும் போது படகு அப்படியே நீரில் மூழ்கி இருக்கிறது.

நடந்தது என்ன

நடந்தது என்ன

படகில் ஏற்பட்ட ஓட்டை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதிக பயணிகளை ஏற்றிய காரணத்தால் இந்த ஓட்டை விழுந்து இருக்கிறது. தண்ணீர் உள்ளே புகுந்து அப்படியே படகு கவிழ்ந்து உள்ளது. மொத்தம் 400 பேரும் இதனால் நீருக்குள் மூழ்கினார்கள். கடந்த 20ம் தேதி இந்த சம்பவம் நடந்தாலும் இன்னும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

இந்த விபத்து காரணமாக மொத்தம் 218 பேர் பலியாகி உள்ளனர். 80 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறாரக்ள். 168 பேரில் உடல் அடையாளம் காணப்பட்டு இருக்கிறது. இன்னும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படகின் உரிமையாளர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். படகை ஓட்டிய நபர் உயிர்பிழைத்துவிட்டார். அவர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+