பாகிஸ்தானில் இலங்கை அதிபர் சிறிசேனா – இன்று முக்கிய ஒப்பந்தகள் கையெழுத்து
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு அவர் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கராச்சி விமானநிலையத்தில் இறஙக்கிய அவருக்கு சிந்து மாகாண முதல்வர் சையது குவாயிம் அலி ஷா வரவேற்றார்.

அதனையடுத்து இஸ்லாமாபாத்திற்கு சென்ற சிறிசேனாவை விமான நிலையத்தில் பிரதமர் நவாஸ்ஷெரீப் வரவேற்றார்.
தொடர்ந்து இன்று பாகிஸ்தான் அதிபர் ஹூசைனை சந்தித்து பேசுகிறார். பின்னர் இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட முக்கியத்துறைகளி்ல் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
மைத்ரிபால சிறிசேனா அதிபராக பதவியேற்றபின்னர் பாகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறையாகும்.












Click it and Unblock the Notifications