மறைந்த சவுதி மன்னரின் ரகசிய மனைவிக்கு ரூ.151 கோடி, 2 வீடுகள் அளிக்க யு.கே. கோர்ட் உத்தரவு
லண்டன்: மறைந்த சவுதி மன்னர் ஃபஹதின் ரகசிய மனைவிக்கு ரூ.151 கோடி ரொக்கமும், லண்டனில் இரண்டு சொகுசு வீடுகளும் அளிக்க சவுதி இளவரசர் அப்துல் அஜீஸுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலஸ்தீனத்தில் பிறந்து இங்கிலாந்தில் வசித்து வருபவர் ஜனன் ஹர்ப்(68). அவர் சவுதி இளவரசர் அப்துல் அஜீஸிடம் இருந்து அவர் வாக்களித்தபடி ரொக்கம் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கிக் கொடுக்குமாறு வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
மறைந்த சவுதி மன்னர் ஃபஹதுக்கும் எனக்கும் 1968ம் ஆண்டு ரகசியமாக திருமணம் நடைபெற்றது. அப்போது அவர் சவுதி இளவரசராக இருந்தார். நான் ஒரு கிறிஸ்தவ பெண் என்பதால் எங்கள் திருமணத்திற்கு அவரின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நான் திருமணத்திற்கு முன்பு இஸ்லாத்திற்கு மாறிவிட்டேன். என் வாழ்நாள் முழுவதும் என் பணத்தேவையை பார்த்துக் கொள்வதாக ஃபஹத் வாக்களித்தார்.
இந்நிலையில் கடந்த 2003ம் ஆண்டு அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது அவரின் மற்றொரு மனைவிக்கு பிறந்த இளவரசர் அப்துல் அஜீஸ் லண்டன் வந்தார். அவர் லண்டனில் உள்ள டார்செஸ்டர் ஹோட்டலில் வைத்து என்னை சந்தித்து பேசினார். அப்போது அவர் எனக்கு பணமும், லண்டனில் சொகுசு வீடுகளையும் வாங்கிக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.
அவர் வாக்களித்தபடி பணம் மற்றும் சொத்துக்களை அளிக்குமாறு அவருக்கு உத்தரவிடுங்கள் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
ஜனனுக்கு தான் வாக்குறுதி அளிக்கவில்லை என்று இளவரசர் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். ஆனால் நேரில் ஆஜராகி அதை நிரூபிக்கத் தவறிவிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் இளவரசர் அஜீஸ் ஜனனுக்கு ரூ.151 கோடி ரொக்கம் மற்றும் லண்டனில் இரண்டு சொகுசு வீடுகளை அளிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் அவமதித்ததற்காக இளவரசர் ரூ. 25 லட்சம் ரொக்கத்தை தானம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications