ஈரானிலிருந்து உடனே வெளியேறுங்கள்.. தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு அவசர அறிவிப்பு!
தெஹ்ரான்: ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஈரான் மீது தாக்குதல் நடத்த ராணுவ ரீதியான மற்றும் ரகசிய திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அமெரிக்க மக்கள் வெளியேற வேண்டும் என பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவு கவனம் பெற்றிருக்கிறது.
ஈரான் கடல் பகுதியில், அமெரிக்காவின் மிகவும் சக்தி வாய்ந்த யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் மற்றும் அத்துடன் சில தாக்குதல் கப்பல்களும் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்கிற அச்சம் எழுந்திருக்கும் நிலையில், தற்போது அமெரிக்காவின் இந்த உத்தரவு பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.

இப்படியான அறிவிப்புகளை அமெரிக்க கொடுப்பது இது முதல் முறை கிடையாது. கடந்த சில நாட்களாக இந்த அறிவிப்புகளை அமெரிக்கா கொடுத்து வருகிறது. இருப்பினும், தற்போது நிலைமை கொஞ்சம் சிக்கலாகியிருப்பதால் இந்த அறிவிப்பு உலக நாடுகளால் கவனம் பெற்றிருக்கிறது. ஈரான் வசம் அணுசக்தி தொழில்நுட்பம் இருக்கிறது. இதனை தற்போது வரை மின்சார உற்பத்திக்காக அந்நாடு பயன்படுத்தி வருகிறது. ஆனால், இதனை கொஞ்சம் டெவலப் செய்தால் அணு ஆயுதம் உருவாக்க முடியும்.
எனவே ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கிவிட கூடாது என்பதால், தங்கள் நாட்டுடன் ஒப்பந்தம் செய்துக்கொள்ள வேண்டும் என டிரம்ப் கோரி வருகிறார். இந்த கோரிக்கையை ஈரான் பரிசீலித்து வருகிறது. இன்னும் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஈரானை மிரட்ட அந்நாட்டை நோக்கி தனது கப்பற்படையை அனுப்பியுள்ளார் டிரம்ப்.
அவர் அனுப்பியிருக்கும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் 90க்கும் அதிகமான போர் விமானங்கள் உள்ளன. அதேபோல இந்த கப்பலை அணு குண்டு வீசி மட்டுமே அழிக்க முடியும். போதாத குறைக்கு, ஈரான் மீது தாக்குதல் நடத்த ரகசிய திட்டங்களை வகுத்து வருவதாகவும் டிரம்ப் கூறியிருக்கிறார். இப்படி இருக்கையில், அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிவிப்பு மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.
-
நூலிழையில் தப்பிய ஈரான் உச்ச தலைவர்.. அமெரிக்கா - இஸ்ரேல் அட்டாக்கில் எஸ்கேப்பானது எப்படி? திக்திக் -
இஸ்ரேல் ஈரானை அடிச்சா.. வத்தலக்குண்டுக்கு வலிக்கும்! வாழ வைக்காத வாழை இலை! வதங்கும் விவசாயிகள்! -
சண்டைக்கு மட்டும் வாங்க.. சமாதானத்துக்கு வாய்ப்பே இல்லை! ட்ரம்பை லெஃப்ட் ஹேண்ட்டில் டீல் செய்யும் ஈரான்! -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
ஈரானுக்கு ஆதரவாக உள்ளே வரும் சீனா.. மிக பெரிய ட்விஸ்ட் கொடுத்த ஜின்பிங்.. அடுத்து என்ன நடக்கும்? -
"ஈரான் போர் முடிவுக்கு வரக்கூடாது.. இஸ்ரேலின் கொடூர திட்டம்!" லாரிஜானி படுகொலை உணர்த்துவது இதை தான் -
ஈரானுக்கு அபார சக்தி இருக்கு.. இப்படி பதிலடி கொடுப்பாங்கனு நினைக்கல.. மிரண்டுப்போய் டிரம்ப் சொன்ன வார்த்தை -
ஈரான் பக்கம், ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 3,00000 டன் இந்திய எல்பிஜி! பரபரக்கும் மத்திய அரசு -
கெஞ்சாத குறையாக கேட்ட டிரம்ப்.. மதிக்காத ஐரோப்பிய நாடுகள்.. ஈரான் போரில் தலையிட மறுப்பது ஏன்? -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
"நாங்க ஷாக் ஆயிட்டோம்!".. உதவி கேட்டு கதறும் டிரம்ப்.. ஈரானிடம் மண்டியிடுகிறதா அமெரிக்கா? -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம்












Click it and Unblock the Notifications