பென்காசி அமெரிக்க தூதரக தாக்குதல்- தீவிரவாதிகள் பற்றி தகவல் அளித்தால் 1 கோடி டாலர் சன்மானம்!!
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: லிபியாவில் பென்காசி நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீதான தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பற்றி தகவல் அளித்தால் 1 கோடி டாலர் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பென்காசியில் அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. அலுவலகம் மீது கடந்த ஆண்டு தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.
இத் தாக்குதலில் அமெரிக்க தூதர் உள்பட 4 பேர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக லிபியாவின் ரகசிய போலீசாரும் அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால், தாக்குதலை நடத்தியவர்கள் யார் ? என்பது தொடர்பாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இத் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில் தகவல் அளிப்பவர்களுக்கு 1 கோடி டாலர்களை பரிசாக வழங்குவதாக அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications