லண்டனில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழர் போராட்டம்- கதவுகளை மூடிவிட்டு ஓடிய இந்திய தூதரக அதிகாரிகள்
ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக மனு கொடுக்க வந்த தமிழர்களை பார்க்காமல் இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளே ஓடி ஒளிந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video

லண்டன்: ஸ்டெர்லைட்டுக்கு தடை விதிக்க கோரி மனு கொடுக்க வந்த தமிழர்களை பார்க்க விரும்பாமல் இந்திய தூதரகத்தின் அதிகாரிகள் கதவை மூடி கொண்டனர். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பரபரப்பாகி வருகிறது.
தூத்துக்குடியில் உள்ள காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் சுவாச கோளாறு, உடல்நல குறைபாடு, இதய பிரச்சினைகள் ஆகியன ஏற்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். இதனால் இந்த ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மற்றும் சுற்றியுள்ள மக்கள், கல்லூரி மாணவர்கள், குழந்தைகள் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக லண்டனில் அந்த ஆலையின் உரிமையாளர் வீடு முன்பு கடந்த வாரம் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிக்கக் கோரி மனு கொடுக்க சில தமிழர்கள் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு குடும்பத்துடன் சென்றனர்.
கைக் குழந்தைகளுடன் வந்த அவர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. தாங்கள் மனு கொடுக்க வந்ததை கூறிய பிறகும் இந்திய தூதரக அதிகாரிகள் கதவை மூடிவிட்டு ஓடுகிறார். இதை தொடர்ந்து பார்வையாளர்கள் உள்ளே வரும் வாசல் வழியாக வாருங்கள் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
அதன்படி அந்த வாசல் வழியாக போய் கதவை தட்டினால் உள்ளே இருந்தபடியே பார்த்து கொண்டிருக்கின்றனரே தவிர யாரும் கதவை திறக்கவில்லை. மனு கொடுக்க வந்த தமிழர்களை பார்த்து ஓடி ஒளிகின்றனர் என்று கூறிய அங்கேயே இந்திய தூதரக அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
தமிழர்களை இந்திய தூதரக அதிகாரிகள் மதிப்பதே இல்லை என்ற குற்றச்சாட்டையும் அவர்கள் முன்வைத்தனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications