ஜெ. உடல்நிலை மிக மிக மோசம்: லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே அறிக்கை அதிர்ச்சியளிப்பதாக உள்ளதே!
லண்டன்: முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த லண்டனை சேர்ந்த மருத்துவர் ரிச்சர்ட் பீலே, வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னால் இதற்கு மேல் எதையும் செய்ய முடியாது என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே இன்று வெளியிட்ட அறிக்கையில், அப்பல்லோ மருத்துவமனையில் உலக தரம்மிக்க உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் உள்ளன என்றும், எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்டோரும் சிறப்பான சிகிச்சையை அளித்தாகவும், ஆனால் நிலைமை கைமீறிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜெ. உடல்நிலை மிக மிக மோசம்... அதிகபட்சம் என்ன செய்யமுடியுமோ செய்தாகிவிட்டது: லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே #jayalalithaa #RichardBeale pic.twitter.com/l1ypO4KE78
— Oneindia Tamil (@thatsTamil) December 5, 2016
இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், உயர் சிகிச்சையளிக்க மாற்று ஏற்பாடு செய்யலாம் என்று ரிச்சர்ட் பீலே அதில் குறிப்பிடவில்லை. உட்சபட்ச சிகிச்சை அளிக்கப்பட்டாகிவிட்டது. இதற்கு மேலும் சிகிச்சை அளிக்க எதுவும் இல்லை என்பதே அவரது அறிக்கையின் சாராம்சமாக இருக்கிறது.
அப்பல்லோவும், ரிச்சர்ட் பீலேவும் ஒரே நேரத்தில் ஜெயலலிதா உடல்நிலை குறித்து நெகட்டிவான தகவல்களை கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications