Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஃபெட்னா தமிழ் விழாவில் ஏராளமான போட்டிகள்: பங்கேற்க விரும்புவோர் கவனத்திற்கு!

Subscribe to Oneindia Tamil

கலிபோர்னியா: கலிபோர்னியாவில் ஜூலை மாதம் நடக்கும் வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை(ஃபெட்னா) தமிழ் விழாவில் ஏராளமான போட்டிகள் நடத்தப்படுகிறது.

வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை(ஃபெட்னா), சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் நடத்தும் தமிழ் விழா 2015 அதாவது 28வது ஃபெட்னா வருடாந்திர கூட்டம் வரும் ஜூலை மாதம் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்களுக்கு நடக்க உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

Lot of competitions to be conducted in Fetna Tamil Vizha

தமிழர்களின் கலை, இலக்கியம், வாழ்வியல் சார்ந்த பல தரப்பட்ட சுவையான நிகழ்வுகள் விழாவிற்கு வரும் ஒவ்வொருவரும் பார்த்து, கேட்டு மகிழ்ந்து பயன்பெறும் வகையில் நடைபெறவுள்ளது. இதனை அமெரிக்கத் தமிழர்களின் பெரு விழா என்றால் அது மிகையன்று!

அத்தகைய சிறப்பு மிகு விழாவில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் பார்த்து, கேட்டு மகிழ மட்டுமல்லாமல், பங்கேற்று மகிழும் வகையிலும் பல தரப்பட்ட நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடைபெறவுள்ளது.

கீழே பட்டியலிடப்பட்ட அந்நிகழ்வுகளில் பங்கேற்றுப் பயன்பெற பேரவை உங்களை அன்புடன் அழைக்கிறது. போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களின் பெயர்களை இணையத்திலோ, மின்னஞ்சல் மூலமாகவோ பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அறிவார்ந்த, நகைச்சுவை நிறைந்த கருத்துக்களம் நிகழ்ச்சி:

அமைப்பு: விஜய் தொலைக்காட்சியின் "நீயா? நானா?" வடிவத்தில் அமைந்த, ஒரு அணிக்கு 10 முதல் 15 உறுப்பினர்களைக் கொண்ட, இரண்டு அணிகள்

கருத்தாடும் / வாதாடும் நிகழ்ச்சி

தலைப்பு :- தமிழன் தன் அடையாளத்தை நிலைநிறுத்த மிகவும் அவசியமானது மொழியா, கலையா?

ஒருங்கிணைப்பாளர்: கவிஞர் சுமதி ஶ்ரீ

மொத்தப் பங்கேற்பாளர்கள் : 20 முதல் 30 வரை

பதிவு செய்யக் கடைசி நாள் : ஏப்ரல் 30, 2015

பதிவு செய்ய : [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கவியரங்கம்:

கவிமாமணி பேராசிரியர் அப்துல்காதர் அவர்கள் தலைமையில் "ஆர்த்தெழு நீ!" என்ற பொதுத் தலைப்பில் ஃபெட்னா தமிழ்விழாவில் கவியரங்கம் நடைபெற உள்ளது.

கவியரங்கத்தில் பங்குபெற தமிழார்வலர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கீழ்க்காணும் துணைத் தலைப்புகள் ஏதேனும் ஒன்றில் மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் கவிதை இயம்ப வாய்ப்பளிக்கப்படும்.

* சமத்துவம் காண
* பெண்ணியம் பேண
* மேற்குலகு நாண
* பகுத்தறிவு பூண
* உறவுகள் செழிக்க
* இன நலம் தாங்க
* மொழி வளம் ஓங்க
* சுற்றுச்சூழல் கேடு நீங்க

இதில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தோர்/தெரிவிப்போர் தங்கள் கவிதைகளை தெரிவு செய்யப்பட்ட துணைத்தலைப்புகளில் எழுதி மின்னஞ்சல் மூலம் வரும் மே மாதம் 10ஆம் தேதிக்குள் fetna2015.kaviyarangam@gmail என்ற முகவரிக்கு ஒருங்குறியில்(unicode) தட்டச்சு செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். பெறப்பட்ட கவிதைகள் அனைத்தையும் கவியரங்க நடுவர் அய்யா அப்துல்காதர் அவர்களுக்கு அனுப்பி அதிலிருந்து எட்டு கவிதைகளை அவர் தேர்ந்தெடுப்பதாக திட்டம்.

மாபெரும் தமிழ் இலக்கிய வினாடி வினா பல்லூடக நிகழ்ச்சி:

தமிழ் இலக்கியத்தில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் எட்டு ஆண்டுகளாக இலக்கியம் சார்ந்த வினாடி வினா நிகழ்ச்சி பேரவை விழாவில் நடந்து வருகிறது. இந்த ஆண்டு பாடத்திட்டத்தில்

திருக்குறள்,
சிலப்பதிகாரம்,
அடிப்படை இலக்கணம்,
சமய இலக்கியம்,
நீதி இலக்கியம்,
நாட்டுநடப்பு
தமிழ் இலக்கிய வரலாறு
முதலிய பகுதிகள் அடங்கும். இரண்டு மாத காலம் பல்வழி அழைப்பு வழியாக முறையாக பயிற்சியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாபநாசம் சிவன் அணி, வீ.ப.கா சுந்தரம் அணி என இரு அணிகளாகப் பிரிந்து ஒவ்வொரு அணியிலும் 25 உறுப்பினர்கள் போட்டியில் கலந்துகொள்கின்றனர்.

கருத்தும் ஆக்கமும்: நாஞ்சில் பீற்றர்

அணித்தலைவிகள்: திருமதி சாந்தி விஜயகுமார்(வெர்ஜீனியா) மற்றும் திருமதி சாந்தி புகழேந்தி (கலிபோர்னியா)
பயிற்சியாளர்:- கொழந்தவேல் இராமசாமி

குறள் தேனிப் போட்டி, குறும்படப் போட்டி, ஓவியப் போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் மே 30ம் தேதிக்குள் தங்கள் பெயரை முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் புகைப்படப் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் மே 15ம் தேதிக்குள் தங்கள் பெயரை முன்பதிவு செய்ய வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+