மிதமான நிலநடுக்கத்தால் அதிர்ந்தது அந்தமான் தீவுகள்!!
போர்ட் பிளேயர்: நேபாள நிலநடுக்கத்தின் பெருந்துயர் அகலாத நிலையில் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.1 ஆகப் பதிவாகி உள்ளது.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமையன்று மிகப் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.1 ஆக இருந்தது.

இந்நிலநடுக்கத்தால் 6 ஆயிரம் பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து இந்தியா, திபெத், பாகிஸ்தானிலும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தியாவில் மட்டும் 100 பேர் நிலநடுக்கத்துக்குப் பலியாகினர். இந்நிலையில் பாப்புவா நியூ கினியா தீவுகளில் இன்று கடும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இது ரிக்டரில் 6.7 ஆக இருந்தது. அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு வாபஸ் பெறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்தமான் தீவுகளிலும் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. போர்ட் பிளேயரின் தென்மேற்குப் பகுதியில் 135 கி.மீ தொலைவில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications