இலங்கைக்கு தெற்கே நடுக்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 6.2 ஆக பதிவு
கொழும்பு: இலங்கைக்கு தெற்கே நடுக்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி இருந்தது.
இலங்கையின் தென்கிழக்கில் இந்திய பெருங்கடல் பரப்பில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியப் பெருங்கடலில் கடலுக்கு அடியே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து தென் கிழக்கில் 1326 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இலங்கை தலைநகர் கொழும்பில் நிலநடுக்கம் மிக கடுமையாக உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்த போதும் இலங்கைக்கு இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்பதால் சுனாமி பேரலை உள்ளிட்ட அச்சம் உருவாகி இருந்தது. தற்போதைய நிலையில் எதுவித ஆபத்தும் இல்லை என்கின்றன புவியியல்துறை வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications