மலேசியாவில் கொரோனா தாக்குதலுக்கு முதல் முறையாக 2 பேர் பலி- 673 பேருக்கு பாதிப்பு
கோலாலம்பூர்: மலேசியாவில் கொரோனா தொற்று நோய் தாக்குதலுக்கு முதல் முறையாக 2 பேர் பலியாகி உள்ளனர். இந்த தொற்றுநோயால் மொத்தம் 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
140 நாடுகளை முடக்கி வைத்திருக்கும் கொரோனா வைரஸ் மனித உயிர்களை குடித்து வருகிறது. சீனாவை தொடர்ந்து இத்தாலி, ஈரானில் அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் ஒருவர் பலியாகி இருக்கிறார். இதேபோல் மலேசியாவில் கொரோனா தாக்குதலுக்கு முதல் முறையாக 2 பேர் பலியாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீபெட்டா பள்ளிவாசலில் நடைபெற்ற ஒன்றுகூடலில் பங்கேற்ற 34 வயது ஆண் ஒருவரும் சரவாக் கூச்சிங் தேவாலயத்தைச் சேர்ந்த 60வயது மதபோதகர் ஒருவரும் கொரோனா தாக்கி பலியாகி உள்ளனர். இதனை மலேசியா சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
சரவாக் கிறிஸ்வத மதபோகர், கொரோனாவால் பலியானதால் அந்த தேவாலயத்தைச் சேர்ந்த 100க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மலேசியாவில் புதியதாக இன்று மட்டும் 120 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
மொத்தமாக மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 673 ஆக அதிகரித்துள்ளது. மலேசியாவில் வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் பங்கேற்பதாலேயே கொரோனா அதிகம் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications