மூங்கில் பைனாகுலர் மூலம் விமானத்தை தேடிய மலேசிய சூனியக்காரர்
கோலாலம்பூர்: சீனா 10 செயற்கைக்கோள்களை பயன்படுத்தி மாயமான விமானத்தை தேடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விமானத்தை கண்டுபிடிக்க சூனியக்காரரின் உதவியை நாடியுள்ளது மலேசியா.
கடந்த சனிக்கிழமை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீனாவுக்கு கிளம்பிய விமானம் மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணியில் சீன அரசு 10 செயற்கைக்கோள்களை ஈடுபடுத்தியுள்ளது. நியூசிலாந்து அரசு அதிநவீன விமானத்தை தேடுதல் பணிக்கு அனுப்பி வைக்கிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

இந்நிலையில் மலேசியாவோ விமானத்தை கண்டுபிடிக்க பிரபல சூனியக்காரரான இப்ராஹிம் மத் ஜின் என்பவரின் உதவியை நாடியுள்ளது. அந்த நபர் விமானம் கிளம்பிய கோலாலம்பூர் விமான நிலையத்தில் பூஜை நடத்தியுள்ளார். அவரை இந்த பூஜையை செய்ய நாட்டின் முக்கிய தலைவர்கள் தான் அழைத்ததாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் ஒரு கையில் மீன் வலையையும், மறுகையில் மூங்கில் பைனாகுலரையும் வைத்து விமானத்தை தேடியுள்ளார்.
விமானம் பற்றி அந்த சூனியக்காரர் கூறுகையில்,
விமானம் தற்போதும் பறந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இல்லை என்றால் கடலில் விழுந்திருக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications