மலேசியா: கொரோனாவை கட்டுப்படுத்த அவசரநிலை பிரகடனம்- நாடாளுமன்றம் நடைபெறாது- எந்த தேர்தலும் இல்லை!
கோலாலம்பூர்: மலேசியாவில் புதிய வகை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அவசர நிலை பிரகடன செய்யப்பட்டுள்ளது. இந்த அவசர நிலை பிரகடனம் ஆகஸ்ட் 1-ந் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்த நிலையில் 2 வார கால லாக்டவுனை பிரதமர் முஹீதின் யாசின் நேற்று அறிவித்திருந்தார். இந்த லாக்டவுன் இன்று நள்ளிரவு முதல் வரும் 26-ந் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மலேசியாவில் அவசர நிலை
இந்நிலையில் மலேசிய பிரதமர் முஹீதின் யாசின் தலைமையிலான அமைச்சரவை பரிந்துரையை ஏற்று அந்நாட்டில் அவசர நிலையை மாமன்னர் சுல்தான் அப்துல்லா ஹாஜி அகமட் ஷா பிரகடனப்படுத்தி இருக்கிறார். இந்த அவசர நிலை பிரகடனமானது ஆகஸ்ட் 1-ந் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அவசரநிலை- பிரதமர் விளக்கம்
இந்த அவசர நிலை பிரகடனம் தொடர்பாக அந்நாட்டு மக்களிடம் பிரதமர் முஹீதீன் யாசின் விளக்கம் அளித்து கூறியதாவது: தற்போதைய அவசரநிலை பிரகடனத்தால் கூட்டரசு அரசாங்கம், மாநில அரசாங்க செயல்பாடுகளில் பாதிப்பு இருக்காது. பொருளாதார நடவடிக்கைகளில் இது பாதிப்பை ஏற்படுத்தாது.

நாடாளுமன்றம்- தேர்தல் இல்லை
அவசரநிலை காலத்தில் நாடாளுமன்ற கூட்டங்கள் நடைபெறாது. பொதுத்தேர்தல், இடைத்தேர்தல்கள் நடத்தப்படமாட்டாது. அதேநேரத்தில் நீதிமன்றங்கள் எப்போதும் போல் இயங்கும். அவசர நிலை என்பது ராணுவ அதிகார கட்டுப்பாட்டினை குறிப்பதும் ஆகாது. அவசர நிலை தொடர்பாக மாமன்னருக்கு ஆலோசனை வழங்க எம்.பிக்கள், சுகாதார அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும்.

பொதுத்தேர்தல்
கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் பொதுத்தேர்தல் நடைபெறும். இந்த அவசரநிலை காலங்களில் அரசியல்வாதிகள் சர்ச்சைக்குரிய விவகாரங்களில் ஈடுபடவும் கூடாது. இவ்வாறு பிரதமர் முஹீதின் யாசின் தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications