மலேசியாவில் பிரதமருக்கு எதிர்ப்பு... மோடியே திரும்பி போ என தமிழர்கள் முழக்கம்
மலேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வாழும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video

கோலாம்பூர்: மலேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வாழும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மோடியே திரும்பி போ என முழக்கமிட்டனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்த நிலையில் அதை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். எனினும் அது குறித்து நடவடிக்கை எடுக்காததால் கடந்த 100 நாட்களாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடந்த 22-ஆம் தேதி பேரணி சென்ற போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகிவிட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துவிட்டனர்.

இதற்கு மோடி வாய் திறந்து எந்த ஒரு கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவர் மலேசியாவுக்கு சுற்றுப்பயணமாக இன்று சென்றுள்ளார். அங்கு அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள தமிழர்கள் மோடியே திரும்பி போ என கோஷமிட்டனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தமிழர்களை கொல்லாதே, தமிழ் மண்ணை சேதப்படுத்தாதே என்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே காவிரி விவகாரத்தில் சென்னை வந்திருந்த மோடிக்கு கோ பேக் மோடி என்று கூறிய வாசகம் டுவிட்டரில் உலக அளவில் முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications