15 ஆண்டுகளாக இரட்டை சகோதரனை வயிற்றில் சுமந்த மலேசிய சிறுவன்

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்: மலேசியாவில் 15 ஆண்டுகளாக தனது இரட்டை சகோதரனை வயிற்றில் சுமந்துள்ளார் ஒரு சிறுவன். இந்நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றில் இருந்த கரு வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கேதா மாநிலத்தில் இருக்கும் பாலிங் நகரை சேர்ந்தவர் அஸ்மா அகமது. அவருக்கு 8 குழந்தைகள். அதில் 5வது குழந்தை முகமது ஜுல் ஷஹ்ரில் சைதின்(15). அஸ்மா கர்ப்பமடைந்தபோது சைதினுடன் இன்னொரு கருவும் உருவாகியுள்ளது. இரட்டையர்களில் ஒரு கரு தொப்புள் கொடி வழியாக மற்றொரு கருவின் வயிற்றுக்குள் சென்றுவிட்டது.

Malaysian boy has unborn twin in his stomach for 15 years

இதையடுத்து சைதின் பிறந்த நாளில் இருந்து அவரது வயிற்றில் இரட்டை சகோதரன் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக சைதினுக்கு வயிற்று வலியாக இருந்துள்ளது. மருத்துவ பரிசோதனையில் அவரது வயிற்றில் முழுவதும் வளர்ச்சியடையாத கரு இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கேதாவில் உள்ள சுல்தான் அகமது ஹமீது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைதினுக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றில் குழந்தை வடிவில் இருந்த கரு அகற்றப்பட்டது. அதற்கு கைகள், கால்கள், ஆணுறுப்பு, முடி இருந்தது. கண்களும், மூக்கும் தான் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை.

இரட்டையர்களில் ஒருவரின் வயிற்றில் கரு தங்கிவிடுவது 5 லட்சத்தில் ஒருவருக்கு நடக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+