லண்டனில் இந்திய தூதர் நிகழ்ச்சியில் தலைமறைவு குற்றவாளி விஜய் மல்லையா கலந்து கொண்டதால் சர்ச்சை
லண்டன்: இந்தியாவில் வங்கிகளிடம் கடன் பெற்று திருப்பித் தராமல் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடிய தலைமறைவு குற்றவாளி விஜய் மல்லையா, அந்நாட்டில் இந்திய தூதர் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
ரூ9,000 கோடிக்கு வங்கிகளிடம் கடன்பெற்றவர் விஜய் மல்லையா. ஆனால் வங்கிக் கடன்கள் எதனையும் அவர் திருப்பி செலுத்தவில்லை. வங்கிகள் இக்கடனை திருப்ப செலுத்துமாறு கேட்டபோது இங்கிலாந்துக்கு தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார் விஜய் மல்லையா.

சொத்து முடக்கம்
இதையடுத்து அவரது ரூ1,411 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. அமலாக்கப்பிரிவின் இந்நடவடிக்கையை முன்கூட்டியே தெரிந்து கொண்ட விஜய் மல்லையா அவர்களுக்கு தெரியாமலேயே 2 சொத்துகளை இங்கிலாந்தில் இருந்தபடியே விற்பனை செய்துவிட்டார்.

தலைமறைவு குற்றவாளி
இதைத் தொடர்ந்து விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளியாக பிரகடனம் செய்ய அமலாக்கத்துறை கோரியது. இதை ஏற்று அமலாக்கப் பிரிவு நீதிமன்றமும் விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளி என பிரகடனம் செய்தது. அத்துடன் விஜய் மல்லையாவை கைது செய்து நாடு கடத்தவும் இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

திடீரென வந்த மல்லையா
இந்நிலையில் லண்டனில் தொழிலதிபர்கள் தொடர்பான "Mantras for Success: India's Greatest CEOs Tell You How to Win" என்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்துக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா பங்கேற்றிருந்தார்.
|
வெளியேறிய தூதர்...
ஆனால் திடீரென விஜய் மல்லையாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் விஜய் மல்லையா பங்கேற்றதை நவ்தேஜ் சர்னா விரும்பவில்லை. இதனால் கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் அவர் வெளியேறிவிட்டதாக இப்புத்தகத்தை எழுதிய ஷூகேல் ஷேத் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications