அட கொடுமையே.... நியூசிலாந்து நாடளுமன்றத்தின் கதவுகளை... கோடாரியால் அடித்து நொறுக்கிய நபர் கைது!
வெலிங்டன்: நியூசிலாந்து நாடளுமன்ற கண்ணாடி கதவுகளை கோடரியால் அடித்து நொறுக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பிடிபட்ட நபரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் அந்த நாட்டு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இந்த நாடாளுமன்ற கட்டிடம் பீஹைவ் என அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் 31 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நாடாளுமன்றத்தின் கண்ணாடி கதவுகளை கோடரியால் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அறிந்து உடனடியாக அங்கு வந்த போலீசார், அந்த நபரை கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:- அந்த நபர் கோடரியால் கண்ணாடி பேனல்களில் சிறிது சேதத்தை ஏற்படுத்தினார், ஆனால் கட்டிடத்திற்குள் நுழைய முயற்சிக்கவில்லை. இந்த சம்பவம் நடந்தபோது கட்டிடத்தின் உள்ளே சிலர் இருந்தனர். இந்த தாக்குதலுக்கு காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக அவரிடம் விசாரித்து வருகிறோம் என்றனர்.
கைதான நபரை வெலிங்டன் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர் மீது வேண்டுமென்றே சேதம் விளைவித்தல், தாக்குதல் ஆயுதம் வைத்திருந்தல் என்ற வழக்கு பதியப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications