இன்டர்நெட்டில் தீயாக பரவும் வாலிபரின் 'ஹாட்' வீடியோ
லண்டன்: வெளிநாட்டவர் ஒருவர் குளிக்கும் டப்பில் மிளகாய் சாஸை ஊற்றி அதில் மிளகாயை வேறு போட்டு குளித்து அம்மா எரியுதே, அப்பா எரியுதே என்று அலறிய வீடியோ இணையதளங்களில் வைரலாகியுள்ளது.
வெளிநாட்டவர் ஒருவர் குளிக்கும் டப்பில் 1, 250 பாட்டில் மிளகாய் சாஸை ஊற்றி போதாக்குறைக்கு அதில் மிளகாயை வேறு போட்டார். அந்த டப்பில் படுத்த உடன் எரிச்சல் தாங்க முடியாமல் ஆ, ஊ என்றார். அதன் பிறகு துணிவை வர வைத்துக் கொண்டு சாஸில் முங்கி எழுந்தார்.
சாஸ் கண், மூக்கில் பட்டதும் அவரால் எரிச்சலை தாங்க முடியாமல் அலறினார். இதையடுத்து அவர் டப்பில் இருந்து எழுந்து ஓடிச் சென்று நீரை வைத்து முகத்தை கழுவினார்.
பின்னர் உடல் எரிச்சலை தாங்க முடியாமல் போய் ஷவரில் நின்றார்.
குளித்த பிறகு அவர் உடல் சிவந்திருந்தது. இந்த வினோத குளியலை அவர் வீடியோ எடுத்து யூடியூபில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையதளங்கலில் வைரலாகியுள்ளது.












Click it and Unblock the Notifications