சிறுமியை சர்ச்சுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம்.. கையை அறுத்து ரத்தத்தையும் குடித்த மனித காட்டேறி..
நியூயார்க்: அமெரிக்காவில் பதினான்கே வயதான சிறுமியை சர்ச்சுக்குள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து, அந்த சிறுமியின் கையையும் அறுத்து ரத்தத்தைக் குடித்த வெறி பிடித்த இளைஞன் கைது செய்யப்பட்டான்.
வெஸ்ட்மோர் லேண்ட் கவுன்ட்டியை ஒட்டியுள்ள வேன்டர்கிப்ட் பகுதியை சேர்ந்தவன் 21 வயதான ஜோனத்தன் ரியான் டேவிஸ். இவன் தனது கண்ணில் தென்படும் சின்னஞ்சிறு கன்னிப்பெண்களை சீரழிப்பதையே பொழுதுப்போக்காக செய்து வந்துள்ளான்.

அண்மையில் 14 வயது சிறுமி உள்பட 3 இளம்பெண்களை பூங்கா ஒன்றில் சந்தித்த ரியான், அவர்களை தனது வசீகர வார்த்தையால் மயக்கி அருகில் உள்ள ஆள்நடமாட்டம் குறைவான பகுதிக்கு அழைத்து சென்றான். அங்குள்ள சர்ச்சுக்குள் உள்ள தனிமையான அறைக்குள் நால்வரும் நுழைந்தனர்.
முதலில் அந்த 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ரியான், அடுத்தடுத்து இரு இளம்பெண்களையும் சீரழித்தான். பின்னர், தனது கை மணிகட்டை கத்தியால் அறுத்து கொண்டான். பீய்ச்சியடித்த ரத்தத்தை அந்த பெண்களை குடிக்க வைத்தான். பிறகு, அந்த பெண்களின் கை மணிகட்டுகளை அறுத்து, அதில் இருந்து வழிந்த ரத்தத்தை நால்வரும் மாறி,மாறி குடித்து அரக்கத்தனமான இன்பம் அனுபவித்துள்ளனர்.
இந்த கொடூர அனுபவம் பற்றி இதில் தொடர்புடைய ஒரு பெண் அளித்த புகாரையடுத்து, ஜோனத்தன் ரியாஸ் டேவிஸை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வீடியோ கேம்சில் வரும் "மபினோகி" என்ற கதாபாத்திரத்தை பார்த்து, உடல் உறவுக்கு பின்னர் இளம்பெண்களின் ரத்தத்தை சுவைக்கும் பழக்கம் தனக்கு வந்துவிட்டதாக போலீசாரிடம் அவன் தெரிவித்துள்ளான்.
தற்போது, ஜாமினில் விடுதலையாகி இருக்கும் ரியான் மீதான மறுவிசாரணை வரும் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications