சவுதியில் மனைவியை விபசாரத்தில் தள்ளிய கணவருக்கு 8 ஆண்டுகள் சிறை- 1000 சவுக்கடி
Subscribe to Oneindia Tamil
ரியாத்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கணவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் சவுக்கடி வழங்குமாறு சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சவுதியை சேர்ந்த கணவர் ஒருவர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி தனது மனைவியை பாலியல் தொழில் நடத்த செய்துள்ளார். இது தொடர்பான தகவலறிந்த போலீசார் கணவரைக் கைது செய்தனர்.
கோர்ட்டில் ஆஜர் படுத்தப் பட்ட கணவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம் சவுக்கடிகளும் தண்டனையாக வழங்கப் பட்டுள்ளது.
தற்போது, பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ள அந்நபரின் மனைவி மீது தனியாக வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications