கனடாவில் 3 போலீஸார் மர்ம மனிதனால் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
டோரண்டோ: கனடாவில் 3 போலீஸ் அதிகாரிகளை ஒரு மர்ம மனிதன் சுட்டுக் கொலை செய்துள்ளான்.
கனடாவின் கிழக்கு கடற்கரை மாகாணமான நியூ புரூன்ஸ்விக்கில் உள்ளது மான்க்டன் நகரம். இங்கு ராணுவ உடை அணிந்து வந்த மர்மமனிதன் திடீரென போலீஸ் அதிகாரிகள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டார்.
இதில் 3 போலீஸ் அதிகாரிகள் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய மர்மமனிதரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராணுவ உடை அணிந்து வந்த மர்மமனிதனின் போட்டோவை வெளியிட்டு அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications