34 மனித மண்டை ஓடுகளுடன் தெற்கு சூடானில் சவக்குழிகள் கண்டுபிடிப்பு: ஐ.நா. தகவல்
ஜூபா: தெற்கு சூடானில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள சவக்குழிகளில் மனித மண்டையோடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதால், உள்நாட்டுப் போரில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகிறது.
2011-ம் ஆண்டு உதயமான தெற்கு சூடானில் அதிபர் சல்வா கீர் மாயர்தித்தின் ஆட்சி நடக்கிறது. டிங்கா பழங்குடி வகுப்பை சேர்ந்த சல்வா கீர் கடந்த ஜூலை மாதம் நூயெர் பழங்குடி இணத்தை சேர்ந்த துணை அதிபர் ரீக் மசூரை பதவியிலிருந்து அகற்றினார்.
இதையடுத்து அதிபரின் படைக்கும் ரீக் மசூரின் புரட்சிப்படைக்கும் இடையே கடந்த ஞாயிறன்று இரவு திடீரென கலகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு தற்போது கடுமையான உள்நாட்டு போர் நடக்கிறது.
அதிபர் சால்வா கீருக்கு எதிராக நடந்த இந்த கலகம் 2 நாட்களில் முறியடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ராணுவப் புரட்சியின் போது 400 முதல் 500 பேர் வரை பலியாகி இருப்பதாக ஐ.நா. அறிவித்தது.
புரட்சியில் ஈடுபட்டதாக முன்னாள் நிதி அமைச்சர் கோஸ்டி மானிப், முன்னாள் நீதித்துறை அமைச்சர் ஜான் லக் ஜோக், முன்னாள் உள்துறை அமைச்சர் ஜியர் சங் அலங் உள்பட 10 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைநகர் ஜுபாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராணுவ புரட்சியின் விளைவாக சுமார் 20 ஆயிரம் பேர் ஜுபாவில் உள்ள ஐ.நா.வளாகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். முன்னாள் துணை அதிபர் ரிக் மச்சரின் ஆதரவு கலகக்காரர்கள் தலைநகர் ஜுபாவிலிருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள ஜாங்லீ மாநிலத்தின் தலைநகரான போர் நகரத்தை ஏற்கனவே கைப்பற்றியுள்ளனர். தற்போது எண்ணெய் வளம் மிகுந்த யூனிடி மாகாண தலைநகர் பென்துயூவை புரட்சிப்படையினர் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
இதுகுறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை கூறுகையில், ‘போராளிகள் வசமுள்ள பெண்டியூ நகரில் மிகப்பெரிய சவக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மேலும் இரண்டு சவக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.
இந்த சவக்குழியில் 34 பேரின் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து உள்நாட்டுப் போரில் மேலும் நிறையப் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என ஐ.நா. தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications