3வது மாடி ஜன்னலில் இருந்து அலறல்.. மிரண்டு போன மக்கள்.. துணிந்த 3 பேர்.. பரபர வீடியோ..!
2 குழந்தைகளை தீ விபத்தில் இருந்து காப்பாற்றி உள்ளனர்
மாஸ்கோ: 3வது மாடியில் தீ விபத்தில் சிக்கிய 2 குழந்தைகளை 3 பேர் தங்கள் உயிரை கொடுத்து காப்பாற்றி உள்ளனர்.. இந்த 3 பேருக்கும்தான் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ஒரு வீடியோ இணையத்தில் பரபரப்பாக வைரலாகி கொண்டிருக்கிறது. ரஷ்யாவில் மூன்றடுக்கு கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது.
நீலகிரி, கோவை, தேனியில் இடியுடன் மழை பெய்யும்... 5 நாட்களுக்கு குடை அவசியம் மக்களே
அந்த கட்டிடம் அகன்று பெரிதாக காணப்பட்டாலும், நிறைய குடியிருப்புகள் அதனுள் இருப்பதாகவே தெரிகிறது.. இந்த வீடுகளில் ஒன்றில் தீ பிடித்துள்ளது..
குழந்தைகள்
அந்தவீட்டில் யாரையும் காணோம்.. 2 குழந்தைகள் மட்டும் வீட்டுக்குள் தனியாக சிக்கி கொண்டுள்ளனர். எதனால், எப்படி வீட்டிற்குள் தீப்பிடித்து கொண்டது என்று தெரியவில்லை.. கதவை திறந்து வெளியே வரவும் அந்த குழந்தைகளால் முடியவில்லை..
அலறல்
அதனால், தன் வீட்டு ஜன்னல் வழியாக அலறி சத்தம் போட்டுள்ளனர்.. இதை பார்த்த அந்த பகுதி மக்களும் செய்வதறியாது தவித்தனர்.. வீட்டுக்குள் பிடித்த தீயானது, மொட்டை மாடி வரை பரவி சென்று கொண்டிருந்தது.. சுற்றிலும் புகை மூட்டமும் சூழ்ந்துவிட்டது.
3 பேர்
இந்த சூழலில்தான், அந்த ஜன்னலை ஒட்டியிருந்த, ஒரு பைப்பை பிடித்து ஏறி குழந்தைகளை காப்பாற்ற ஒருவர் துணிந்து வந்தார்.. பைப்பை பிடித்து மேலே ஏறி, ஜன்னல் வழியாக கையை நீட்டவும், அந்த குழந்தை அவரது கையில் ஏறி கொண்டது. இதை பார்த்ததும், இன்னொருத்தரும் அந்த பைப்பை பிடித்து ஏறினார்.. இதை பார்த்ததும் இன்னொருத்தரும் பைப்பில் ஏறினார்..
சபாஷ்
3 பேருமே ஒருவர் பின் ஒருவராக குழாயில் ஏறி நின்று கொண்டனர்.ஜன்னல் வழியே ஒவ்வொரு குழந்தையாக வாங்கி கீழே நின்ற அடுத்தவரிடம் கொடுக்க, அவர் இன்னொருத்தரிடம் கொடுக்க தரையில் நின்றவர்கள் குழந்தைகளை வாங்கி கொண்டனர். இதுபோல் 2 குழந்தைகளையும் 3 பேரும் மீட்டுவிட்டனர்.. இதை கண்ணெதிரே பார்த்த அந்த பகுதி மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.. இந்த வீடியோதான் பலருக்கும் ஆச்சரியத்தை தந்து வருகிறது.