வீடில்லாதவர்களை விஷ ஊசி போட்டுக் கொல்லுங்க.. மெக்சிகோ பெண் கவுன்சிலர் கூறுவதைப் பாருங்க
மெக்சிகோ சிட்டி: வீடில்லாதவர்களை விஷ ஊசி போட்டு கொன்று விடலாம் என பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் மெக்சிகோ நாட்டு பெண் கவுன்சிலர் ஒருவர்.
மெக்சிகோ நாட்டின் ப்யூப்லா மாநிலத்தில் உள்ள டெக்கமாச்சல்கோ நகர கவுன்சிலர் ஒல்கா கித்தேரேஸ் மாக்கோரோ என்ற பெண்மணி. இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசுகையில், வீடில்லாதவர்கள் இல்லாமலிருக்க, ‘நமக்கு தீங்கு விளைவிக்காத வீடிழந்தோருக்கு பரிவு காட்டி அவர்களை விஷ ஊசி போட்டுக் கொல்ல வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.

இது செய்தியாக அந்நாட்டு நாளிதழ்களில் வெளியானது. ஒல்காவின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து தனது பேச்சுக்கு ஒல்கா மன்னிப்பு கோரினார்.
மேலும், இதுபோன்று சாலையோரம் வசிக்கும் மக்களில் சிலர் மனநல நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டு, அதற்கான சிகிச்சை என்ற பெயரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் முக்கியச் சாலையின் நடுவில் அடிபட்டுச் சாவதற்காக விடப்படுகின்றனர் என்றும் ஒல்கா குற்றம் சாட்டியுள்ளார்.
சர்ச்சையில் சிக்கியுள்ள ஒல்கா நலிவடைந்த பிரிவினருக்கான ஆணையத்தின் தலைவராக பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications