கடலில் மலேசிய விமானத்தின் நிறத்தில் 2 பொருட்கள் கண்டுபிடிப்பு
பெர்த்: மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள சீன விமானம் ஒன்று மாயமான விமானத்தின் நிறத்தில் 2 பொருட்கள் கடலில் மிதப்பதை கண்டுள்ளது.
239 பேருடன் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்ட விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது. ஆனால் இதுவரை விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் சீன விமானம் சில பொருட்களை கண்டுள்ளது.

சீனா
விமானத்தை தேடும் பணியில் நேற்று ஈடுபட்ட சீன விமானம் இல்யுஷின் ஐஎல்-76 இந்திய பெருங்கடலில் மலேசிய விமானத்தின் நிறத்தில் 2 பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் மிதப்பதை கண்டுள்ளது.

விமானம்
கடந்த வெள்ளிக்கிழமை இந்திய பெருங்கடலில் மிதந்த பொருட்கள் ஏதாவது குப்பையாக இருக்கலாம் அல்லது மாயமான விமானத்தில் இருந்து வந்ததாக இருக்கலாம் என்று மலேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹிஷாமுத்தீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து
தேடல் பணியில் ஈடுபட்டுள்ள நியூசிலாந்து நாட்டு விமானம் கடலில் வெள்ளை நிறத்தில் செவ்வக வடிவிலான பொருள் மிதப்பதை கண்டுள்ளது. ஆனால் அது மலேசிய விமானத்தின் பாகமா என்பது தெரியவில்லை.

உறவினர்கள்
விமானம் பற்றி கூறுவது எல்லாம் பொய். ஒரு உண்மை கூட இல்லை. எதையும் தீர்க்கமாக கூறாமல் எங்களை நோகடிக்கிறார்கள் என்று மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications