இந்தியாவில் 1,116 மலேசியர்கள் தவிப்பு- 6 விமானங்களை ஏற்பாடு செய்தது மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி!
கோலாலம்பூர்: இந்தியாவில் தவித்து வரும் 1,116 மலேசியர்களை அழைத்துச் செல்வதற்காக 6 ஏர் ஆசியா சிறப்பு விமானங்களை மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி (மஇக) ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியாவின் சென்னை, திருச்சியில் ஆயிரக்கணக்கான மலேசியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களை மலேசியாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்தியாவில் தவிக்கும் 1,116 மலேசியர்களை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி செய்துள்ளது. இதற்காக 6 ஏர் ஆசியா சிறப்பு விமானங்களை மலேசிய இந்திய காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது.
ரேஷன் கடைகளில் இனி குழாயடி சண்டை இல்லை.. விரைவில் வீடு தேடி வரும் பொருட்கள் .. தமிழக அரசு அதிரடி
விமானத்துக்கான 10 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டை மலேசிய இந்திய காங்கிரஸ் வழங்கும் என்று மலேசிய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் கமாருதீன் ஜப்பார் தெரிவித்துள்ளார். இதனிடையே சென்னை, மும்பையில் சிக்கிய மலேசியர்களை 2 விமானங்கள் மூலம் அழைத்துவர மலேசிய வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.