ஷியா மதகுரு விவகாரம்: ஈரானுக்கான தூதரை வாபஸ் பெறும் குவைத்
குவைத்: சவுதியில் ஷியா பிரிவு மத குருவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஈரானுக்கான தனது தூதரை குவைத் திரும்பப் பெறுகிறது.
சவுதி அரசை கடுமையாக விமர்சித்து வந்த ஷியா பிரிவு தலைவர் ஷேக் நிமிர் அல் நிமிர் உள்பட 47 பேருக்கு சவுதியில் கடந்த சனிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஷேக்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகத்தை உள்ளூர் மக்கள் சேதப்படுத்தினர். இதையடுத்து சவுதி அரேபியா ஈரானுடனான உறவை துண்டித்துள்ளது.

ஷேக் ஈரானுக்கு மிகவும் நன்றியுள்ளவராக இருந்த தீவிரவாதி என்று சவுதி அரசு கருதியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஈரானுக்கான தனது தூதரை குவைத் அரசு திரும்பப் பெறுகிறது.
சவுதியில் உள்ள சன்னி முஸ்லீம்களுக்கும், ஈரானில் உள்ள ஷியா முஸ்லீம்களும் எதிரும் புதிருமாக உள்ளவர்கள். சிரியா மற்றும் ஏமனில் நடக்கும் பிரச்சனைகளிலும் அவர்கள் எதிர் எதிர் அணியில் உள்ளனர்.
சவுதியில் உள்ள சன்னி முஸ்லீம்கள் ஷியா முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாகவே கருதுவதாக குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications