ஆயிரமாண்டு பழமையான கோயில் வங்கதேசத்தில் கண்டெடுப்பு!
டாக்கா: வங்காளதேசத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த இந்து கோவிலை தொல்பொருள் ஆராய்ச்சியினர் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மெகர்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர் தங்கள் நிலத்தில் உழுது கொண்டிருந்த போது பழங்காலத்து செங்கற்கள் தென்படுவதை கண்டு ஆச்சர்யமடைந்தனர். தொடர்ந்து, தோண்டி பார்த்த போது அங்கே பல தொன்மையான பொருட்கள் கிடைத்தது.

இதுபற்றி கிராமம் முழுவதும் தகவல் பரவியது. தகவலறிந்த, அரசு அதிகாரிகள் விவசாயிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்த அந்த நிலத்தை ஜஹான்கிர்நகர் பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உதவியுடன் அகழ்வாராய்ச்சி செய்தனர்.
அதில், மிகப்பழமை வாய்ந்த இந்து கோவிலின் படிக்கட்டுகளும், எரிந்த நிலையில் காணப்படும் சுவர்களும் தென்பட்டன. தொடர்ந்து தோண்டி பார்த்ததில் அக்கோவில் வைக்கப்பட்டிருந்த கடவுள் உருவச் சிலைகள் கிடைத்தன.
சென் வம்சத்தினர் ஆட்சியின் போது பலால் சென் என்ற மன்னரால் 12வது நூற்றாண்டில் தாக்கேஸ்வரி கோவில் கட்டப்பட்டது. அந்த கோவில்தான் வங்காளதேசத்தின் மிகப்பழமையான இந்து கோவிலாகும். அதன் நினைவாகவே, தலைநகருக்கு டாக்கா என பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications