ஆய்வகத்தில் ''வளர்க்கப்பட்ட'' செயற்கை மார்பகம்.. புற்று நோய் ஆராய்ச்சிக்காக!
லண்டன்: லண்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர், மார்பக புற்றுநோய் ஆராய்ச்சிக்காக ஆய்வகத்தில் செயற்கையாக மார்பகங்களை வளர்த்துள்ளனர்.
மனித மார்பகத்தை முப்பரிமாண முறையில் செயற்கை திசுக்களால் இவர்கள் வளர்த்துள்ளனர்.
இதன் மூலம் மார்பகத்தைத் தாக்கும் புற்று நோய் செல்கள் குறித்த ஆய்வை மேலும் துல்லியமாக்கி, அதைத் தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய இது உதவும் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கையாகும்.

தொழில்நுட்ப சாதனை...
இதுகுறித்து ஸ்டடி லீடர் கிறிஸ்டினா ஷீல் கூறுகையில், ‘இந்த தொழில்நுட்ப சாதனையானது பல ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கும். புற்று நோய் செல்கள் எப்படி மார்பகத்தை தாக்குகின்றன என்பதையும், அதைத் தடுப்பது எப்படி என்பதையும் கண்டுபிடிக்க இந்த செயற்கை மார்பக வளர்ச்சி உதவும்' என்றார்.

ஜெல் மூலம்...
இந்த செயற்கை மார்பகத்தை டிரான்ஸ்பரன்ட் ஜெல் மூலம் உருவாக்கியுள்ளனர். மனித மார்பகங்கள் எப்படி உருவாகி வளர்கின்றனவோ அதேபோல இதையும் வளர்த்துள்ளனர்.

மாற்றம்...
ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுவதும் அவரது மார்பகமானது தொடர்ந்து மாறிக் கொண்டே வரும். மேலும் பிரசவத்திற்குப் பின்னர் பால் உற்பத்திக்கு ஏற்றவாறு அவரது மார்பகமானது மாறிக் கொள்கிறது. எத்தனை முறை பிரசவித்தாலும் பால் உற்பத்தி தடைபடாமல் இருக்க இதுவே காரணமாகும்.

ஆய்வு...
இதற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது அதுகுறித்த ஆய்வும் முடுக்கி விடப்பட்டுள்ளது. அதற்கு இந்த செயற்கை மார்பகம் உதவிகரமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஆச்சர்யம்...
உலக அளவில் செயற்கையாக பெண்ணின் மார்பகத்தை வளர்த்தது இதுவே முதல் முறை என்பதால் ஆய்வாளர்கள் மத்தியில் இது ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications