ஆய்வகத்தில் ''வளர்க்கப்பட்ட'' செயற்கை மார்பகம்.. புற்று நோய் ஆராய்ச்சிக்காக!
லண்டன்: லண்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர், மார்பக புற்றுநோய் ஆராய்ச்சிக்காக ஆய்வகத்தில் செயற்கையாக மார்பகங்களை வளர்த்துள்ளனர்.
மனித மார்பகத்தை முப்பரிமாண முறையில் செயற்கை திசுக்களால் இவர்கள் வளர்த்துள்ளனர்.
இதன் மூலம் மார்பகத்தைத் தாக்கும் புற்று நோய் செல்கள் குறித்த ஆய்வை மேலும் துல்லியமாக்கி, அதைத் தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய இது உதவும் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கையாகும்.

தொழில்நுட்ப சாதனை...
இதுகுறித்து ஸ்டடி லீடர் கிறிஸ்டினா ஷீல் கூறுகையில், ‘இந்த தொழில்நுட்ப சாதனையானது பல ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கும். புற்று நோய் செல்கள் எப்படி மார்பகத்தை தாக்குகின்றன என்பதையும், அதைத் தடுப்பது எப்படி என்பதையும் கண்டுபிடிக்க இந்த செயற்கை மார்பக வளர்ச்சி உதவும்' என்றார்.

ஜெல் மூலம்...
இந்த செயற்கை மார்பகத்தை டிரான்ஸ்பரன்ட் ஜெல் மூலம் உருவாக்கியுள்ளனர். மனித மார்பகங்கள் எப்படி உருவாகி வளர்கின்றனவோ அதேபோல இதையும் வளர்த்துள்ளனர்.

மாற்றம்...
ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுவதும் அவரது மார்பகமானது தொடர்ந்து மாறிக் கொண்டே வரும். மேலும் பிரசவத்திற்குப் பின்னர் பால் உற்பத்திக்கு ஏற்றவாறு அவரது மார்பகமானது மாறிக் கொள்கிறது. எத்தனை முறை பிரசவித்தாலும் பால் உற்பத்தி தடைபடாமல் இருக்க இதுவே காரணமாகும்.

ஆய்வு...
இதற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது அதுகுறித்த ஆய்வும் முடுக்கி விடப்பட்டுள்ளது. அதற்கு இந்த செயற்கை மார்பகம் உதவிகரமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஆச்சர்யம்...
உலக அளவில் செயற்கையாக பெண்ணின் மார்பகத்தை வளர்த்தது இதுவே முதல் முறை என்பதால் ஆய்வாளர்கள் மத்தியில் இது ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications