மிஸ் இஸ்ரேலுடன் செல்பியா?.. நாட்டை விட்டு வெளியேறு.. மிஸ் ஈராக்கிற்கு கொலை மிரட்டல்
மிஸ் இஸ்ரேலுடன் செல்பி எடுத்த காரணத்தால் மிஸ் ஈராக் பட்டம் வென்ற பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது.
பாக்தாத்: மிஸ் இஸ்ரேல் பட்டம் வென்ற பெண்ணுடன் செல்பி எடுத்த காரணத்தால் மிஸ் ஈராக் பட்டம் வென்ற பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மிஸ் ஈராக் பட்டம் பெற்ற சாரா இடான் என்ற பெண்ணை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் பலர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
தற்போது இந்த பிரச்சனை பெரிய அளவில் வைரல் ஆகி இருக்கிறது. ஒரு செல்பி இந்த அளவிற்கு கொலை மிரட்டல் விட வைக்கும் என நினைக்கவில்லை என்று அந்த பெண் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மிஸ் இஸ்ரேல் பட்டம் பெற்ற அடார் கெண்டேல்ஸ் மேன் என்ற பெண்ணும் கருத்து கூறியுள்ளார். அதேசமயத்தில் பலர் இருவருக்கும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
வைரலான செல்பி
சென்ற மாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. இதில் மிஸ் ஈராக் பட்டத்தை சாரா இடான் என்ற தட்டிச்சென்றார். அதேபோல் மிஸ் இஸ்ரேல் பட்டத்தை அடார் கெண்டேல்ஸ் மேன் என்ற பெண் வாங்கினார். இந்த நிகழ்வு முடிந்த பின் இருவரும் செல்பி எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர். அந்த செல்பி வெளியான சில நிமிடத்தில் வைரல் ஆனது.

கொலை செய்யப்படுவார்
இந்த செல்பியை பார்த்த ஈராக் கிளர்ச்சிப்படை, மிஸ் ஈராக் சாரா இடானை கொலை செய்ய போகிறோம் என்று கூறியது. மேலும் அந்த பெண்ணின் பட்டத்தை பறித்து உடனடியாக நாட்டைவிட்டு அந்த பெண்ணை துரத்துவோம். அப்படி அந்த பெண்ணை நாட்டைவிட்டு வெளியேற்ற முடியவில்லை என்றால் உடனே கொலை செய்வோம் என்று குறிப்பிட்டனர். எங்களுக்கு எப்போதும் இஸ்ரேல் எதிரிதான் என்று குறிப்பிட்டு இருந்தனர்.
|
பதிலடி கொடுத்தார்
தற்போது இந்த சம்பவம் குறித்து மிஸ் ஈராக் சாரா இடான் பதில் அளித்து உள்ளார். அதில் "தனி மனித சுதந்திரம் பறிக்கப்படும் முதல் நபரும் கடைசி நபரும் நான் இல்லை. ஈராக்கில் பல பெண்கள் இப்படித்தான் பயந்து கொண்டு வாழ்கிறார்கள். ஈராக் பெண்களுக்கு விடுதலை வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மிஸ் இஸ்ரேலின் பதில்
இந்த சம்பவம் குறித்து மிஸ் இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் ''அவர்கள் இப்போதும் என்னுடன் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். எல்லோரும் ஒன்றாக அமைதியாக வாழ முடியும் என்பதை நிரூபிக்கவே நாங்கள் இப்படி செல்பி எடுத்தோம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications