பேஸ்புக்கை தொடர்ந்து கூகுள் ஆபீஸ் சென்ற மோடி.. சமூக வலைத்தள தாக்கம் பற்றி கலகல பேச்சு
சிலிக்கான்வேலி: மக்களின் நேரத்தை மிச்சப்படுத்த வந்த டெக்னாலஜியில் இப்போது மக்கள் நேரத்தை செலவிடுகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
சிலிக்கான்வேலியிலுள்ள பேஸ்புக் தலைமை அலுவலகம் சென்ற மோடி, டவுன்ஹாலில் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, பேஸ்புக் தலைவர் மார்க் ஜுகர்பர்க், மோடியுடன் அமர்ந்து உரையாடினார்.

அப்போது, சோஷியல் மீடியாவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த மோடி, பெற்றோர் பற்றி பேசியபோது கண் கலங்கினார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும், அருகிலுள்ள கூகுள் தலைமை அலுவலகத்திற்கு மோடி சென்றார்.
கூகுள் தலைமை அலுவலகத்தில் அதன் சி.இ.ஓவும், தமிழருமான சுந்தர் பிச்சை, மோடியை வரவேற்று அலுவலகம் உள் அழைத்துச் சென்று அலுவலகத்தை சுற்றி காண்பித்து விளக்கம் கொடுத்தார்.
இதையடுத்து சுமார் ஆயிரம் பேர் குவிந்திருந்த அரங்கத்தில் மோடி கூறியதாவது: தினமும் 15 மணி நேரத்தை கம்ப்யூட்டர் முன்பாக செலவிட்டு நீங்கள் தீர்வுகளை கண்டுபிடிக்கிறீர்கள். இதற்காக இந்தியர்கள் சார்பில் உங்களுக்கு (கூகுள் ஊழியர்) நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
குழந்தை பால் கேட்டால்கூட, வாட்ஸ்சப்பில் மெசேஜ் அனுப்புகிறேன். கொஞ்சம் பொறு என்று கூறும் நிலைமை இந்தியாவில் வந்துவிட்டது. நேரத்தை மிச்சம்பிடிக்க டெக்னாலஜி உதவும். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது. டெக்னாலஜியில்தான் மக்கள் நேரத்தை செலவிடுகிறார்கள்.
ஆனால் டெக்னாலஜி அரசாட்சியை எளிமையாக்கியுள்ளது. கூகுள் டெக்னாலஜி, இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என நம்புகிறேன். இவ்வாறு மோடி தெரிவித்தார்.
முன்னதாக பேசிய, கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை "முதல்கட்டமாக கூகுள் சார்பில், 100 இந்திய ரயில் நிலையங்களில் ஹை-ஸ்பீட் வைஃபை இணையதளம் வசதி செய்துதரப்படும். இதில் வீடியோக்களைகூட விரைவாக பார்க்க முடியும். மேலும் 400 ரயில் நிலையங்களுக்கு அடுத்த ஆண்டு வைஃபை வசதி செய்து தரப்படும். 11 இந்திய மொழிகளில், ஆண்ட்ராய்டு இயங்குதளம் இயங்கும் வகையில் அப்கிரேட் செய்யப்படும்" என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications