"பன்ச் மேல் பன்ச்" வசனம் பேசி சிலிக்கான் வேலியை சிலிர்க்க வைத்த மோடி
Subscribe to Oneindia Tamil
சான் ஜோஸ்: டிஜிட்டல் புரட்சி பற்றி பிரதமர் நரேந்திர மோடி ஒற்றை வரிகளில் பல பஞ்ச் வசனங்கள் பேசி சிலிக்கான் வேலியைச் சேர்ந்த ஐடி பெரும்தலைகளை கவர்ந்துள்ளார்.
அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சிலிக்கான் வேலி சென்றுள்ளார். அங்கு அவர் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் சிஇஓக்களை சந்தித்து பேசினார்.

மேலும் இன்று நடந்த டிஜிட்டல் இந்தியா கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அவரது உரையின் சிறப்பு அம்சங்கள்,
- நான் உங்களில் பலரை டெல்லி, நியூயார்க், ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் சந்தித்துள்ளேன்.
- ஃபேஸ்புக் மட்டும் ஒரு நாடாக இருந்தால் அது தான் மக்கள் தொகை அதிகம் உள்ள மூன்றாவது நாடு ஆகும்.
- ட்விட்டர் அனைவரையும் ரிப்போர்டர் ஆக்கியுள்ளது.
- ஒருவர் விழித்திருக்கிறாரா, தூங்குகிறாரா என்பது முக்கியம் அல்ல மாறாக அவர் ஆன்லைனில் இருக்கிறாரா, ஆப்லைனில் இருக்கிறாரா என்பது தான் முக்கியம்.
- சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இளம் வாலிபர் இந்தியாவில் உள்ள உடல்நலம் சரியில்லாத தனது பாட்டியுடன் தினமும் ஸ்கைப் மூலம் பேசி ஆறுதல் கூறுகிறார்.
- பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை உணர்த்த ஹரியானாவைச் சேர்ந்த ஒரு தந்தை மகளுடன் செல்ஃபியை அறிமுகப்படுத்தியது சர்வதேச அளவில் பிரபலம் ஆனது.
- இது எல்லாமே நீங்கள் செய்யும் பணியால் தான் சாத்தியமானது.












Click it and Unblock the Notifications