உலகிலேயே மிக அதிகமான ஓட்டு வாங்கிய அரசு மோடியின் அரசு... மோடியை போனில் பாராட்டிய கேமரூன்!
லண்டன்: உலகில் வேறெந்த நாட்டுத் தலைவரும் பெறாத அளவிற்கு அதிக ஓட்டுக்களைப் பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளதாக மோடி தலைமையிலான பாஜக அரசை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பாராட்டியுள்ளார் .
இங்கிலாந்தில் இந்திய கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று போனில் தொடர்பு கொண்டு இந்தியப் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார் இங்கிலாந்து பிரதமர் கேமரூன்.
அப்போது அவர் பேசியதாவது:-

மகிழ்ச்சி...
உலகில் வேறெந்த நாட்டுத் தலைவரும் பெறாத அளவிற்கு அதிக ஓட்டுக்களைப் பெற்று இந்தியாவில் நீங்கள் (பாஜக) ஆட்சி அமைத்துள்ளீர்கள். உங்களுடன் பேசுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

முன்னேற்றப் பாதை...
பிரிட்டன் மற்றும் இந்தியா இரண்டும் இப்போது சீர்திருத்த அரசாங்கங்களைப் பெற்றுள்ளது. மேலும், முன்னேற்றப் பாதையில் சென்று வருகிறது.

இதயத்தின் வெற்றி...
நடந்து முடிந்த தேர்தலில் நீங்கள் வாக்காளர்களின் இதயத்தில் இடம் பிடித்ததன் மூலம் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்' என அவர் பாராட்டினார்.

மகாத்மா காந்தி...
மேலும், அவர் தன் பேச்சினூடே மகாத்மா காந்தியின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தார். அதாவது இந்தியாவின் தேசப்பிதா மகாத்மா காந்தி கூறியது போல், ‘மற்றவர்களுக்கான சேவையில் ஈடுபடும் போது தான் நம்மைப் பற்றி நாமே புரிந்து கொள்ள இயலும்' என அவர் தெரிவித்தார்.

3 காரணிகள்...
அதேபோல், இந்தியா- இங்கிலாந்து நாடுகளுக்கிடையேயான உறவு மிகவும் வலுவானதாக உள்ளதாக கூறிய கேமரூன், தொடர்ந்து இந்த உறவு இப்படியே நீடிக்க இருநாடுகளுக்கிடையே அர்ப்பணிப்பு, மரியாதை மற்றும் இலட்சியம் போன்றவை இருக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications