மகள் 500 கோடி.. மருமகனோ 1000 கோடி... சோனியா குடும்பத்தை கலிபோர்னியாவில் விமர்சித்த மோடி
சான்ஜோஸ்: கலிபோர்னியா மாகாணம் சான்ஜோஸ் நகரில் நடந்த இந்தியர்களுடனான சந்திப்புக் கூட்டத்தின்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மறைமுகமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தை விமர்சித்தும், ஊழல்வாதிகள் என்றும் கூறி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருமகன் என்று அவர் கூறியது சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான நேரடித் தாக்குதலாகே பார்க்கப்படுகிறது.

மோடி பேசுகையில், இந்தியாவில், அரசியல்வாதிகளுக்கு எதிரான புகார்கள் ஏராளம் உள்ளன. இவர் 50 கோடி வாங்கினார், அவரது மகன் 250 கோடி வாங்கினார், மகள் 500 கோடி, மருமகன்.......... 1000 கோடி சம்பாதித்து விட்டார்.. இப்படியெல்லாம் புகார்கள் வரும். (மருமகன் என்று கூறி சில விநாடிகள் பேசாமல் நிறுத்தினார் மோடி.. கூட்டம் ஆர்ப்பரித்தது) என்றார் மோடி.
காங்கிரஸ் தலைவர் சோனியா குடும்பத்தை இப்படி நேரடியாகவும், மறைமுகமாகவும் மோடி விமர்சிப்பது புதிதல்ல. இதற்கு முன்பும் ராபர்ட் வதேராவை மருமகன் என்று விளித்து அவர் விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் அமெரிக்காவில் வைத்து சோனியா குடும்பத்தை அவர் விமர்சித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications