ஏம்ப்பா தம்பிகளா.. உங்களை இப்படி தொங்க விட்டு கார் ஓட்டினா எப்படி இருக்கும்...??

Subscribe to Oneindia Tamil

குவைத்: குரங்கிலிருந்து வந்தான் மனிதன் என்பார்கள். ஆனால் குரங்கை விட மோசமான குணம் மனிதனுக்குள் இருக்கிறது என்பதை அவ்வப்போது நம்மவர்கள் சிலர் நிரூபித்தபடிதான் உள்ளனர்.

அப்படி ஒரு சம்பவம் குவைத்தில் நடந்துள்ளது. பாவம், கார் மீது ஏறிய ஒரு அப்பிராணிக் குரங்கை அது பீதியடைந்து கதறிக் கத்தும் அளவுக்கு படு வேகமாக கார் ஓட்டி பயமுறுத்தியுள்ளனர் சில இளைஞர்கள்.

இந்தக் கொடூரக் காட்சியை வீடியோவிலும் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர் அந்த இரக்கமற்றவர்கள்.

200 கிலோமீட்டர் வேகத்தில்

200 கிலோமீட்டர் வேகத்தில்

கார் மீது ஏறிய அந்தக் குரங்கைப் பார்த்த காரில் இருந்த இளைஞர்கள் படு வேகமாக காரைக் கிளப்பினர். 200 கிலோமீட்டர் வேகத்தில் கார் பறந்தது.

பீதியடைந்து கதறிய குரங்கு

பீதியடைந்து கதறிய குரங்கு

இதைப் பார்த்து பயந்து போன குரங்கு, கார் கன்னாடியில் தனது கால், கைகளால் இறுகப் பிடித்தபடி உயிர் பயத்தில் கதறித் துடித்தது.

சிரித்து ரசித்த இளைஞர்கள்

சிரித்து ரசித்த இளைஞர்கள்

பிடியை விட்டால் மரணம் என்பதால் அந்தக் குரங்கு உயிரைக் காப்பாற்ற துடித்ததை அந்த இளைஞர்கள் விழுந்து விழுந்து சிரித்தபடி ரசித்தனர்.

மரண பீதியுடன் தொங்கிய குரங்கு

மரண பீதியுடன் தொங்கிய குரங்கு

ஜன்னாடியை இறுகிப் பிடித்த அந்தக் குரங்கு, பலமாக வீசிய காற்றில் தான் விழுந்து விடாமல் இருப்பதற்காக துடித்தது பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.

பொறுப்பற்ற செயல்

பொறுப்பற்ற செயல்

இந்த செய்தியை வெளியிட்டுள்ள அரபு நாளிதழான அல் அன்பா, சில இளைஞர்களின் பொறுப்பற்ற செயல் இது. மிகவும் மோசமான, இரக்கமற்ற செயல் என்றும் வர்ணித்துள்ளது.

இந்த சம்பவம் எந்த இடத்தில் நடந்தது என்பது தெரிவிக்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+