நம்ம பாட்டி வடை சுட்ட நிலாவில்... துளசி, டர்னிப் வளர்க்கும் திட்டத்தில் நாசா
நியூயார்க்: சந்திரனில் தாவரங்கள் வளர்க்கும் ஆராய்ச்சியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விண்வெளியில் உள்ள கோள்கள் மற்றும் துணைக் கோள்கள் குறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், சந்திரனில் தாவரங்கள் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாம் நாசா.
அதன் முதல்கட்டமாக துளசி மற்ரும் டர்னிப் வளர்க்க நாசா ஏற்பாடுகள் செய்து வருகிறதாம்.

நாசாவின் திட்டம்....
வரும் 2015 ஆம் ஆண்டு, சந்திரனில் தாவரங்கள் வளர்க்கும் ஆராய்ச்சியை வெற்றிகரமானதாக நடத்த திட்டமிட்டுள்ளதாம் நாசா.

துளசி....
அதற்கு முதற்கட்டமாக அங்கு துளசி மற்றும் டர்னிப் போன்றவற்றை வளர்க்கும் முயற்சியில் களமிறங்க முயற்சித்து வருகிறதாம் நாசா.

தாவர வளர்ப்பின் மூலம்....
தாவர வளர்ப்பின் மூலமாக, சந்திரனில் மனிதன் உயர் வாழ முடியுமா என்ற ஆய்வையும் மேற்கொள்ள நாசா முடிவு செய்துள்ளதாம்.

பெட்டிக்குள் விதை....
இத்திட்டத்தின்படி, ஒரு சிறிய பெட்டகம் போல இருக்கும் கருவியில், இந்த தாவரங்களின் விதைகள் வைக்கப்படுமாம். இது சந்திரனை அடைந்ததும், சிறிய அளவு நீர் அந்த விதைகளுக்கு அளிக்கப்படும், அந்த பெட்டகத்தினுள் இருக்கும் காற்று, விதைகள் 5 முதல் 10 நாட்கள் வளர போதுமானதாக இருக்குமாம்.

ஆய்வு....
சந்திரனில் விதைகளின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்பது குறிப்பிட்ட இடைவெளியில் புகைப்படம் எடுத்து, அதன் மூலம் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications